Tuesday, March 10, 2015

Kishore K Swame: Internet Trolls, Bullying: Manushyaputhiran, Kavin Malar, Karunanidhi


நாலு வருஷம் முன்னாடி கிஷோர் கே சுவாமி என்பவரை பேஸ்புக்கில் எல்லாரும் திட்டி துரத்தி துரத்தி அடிப்பார்கள். லூசுத்தனமா எதையாவது உளறிக்கொட்டி எல்லாரிடமும் செம மாத்து வாங்குவார். அவர் எழுதும் பதிவுகளுக்கு இரண்டு மூன்று லைக் கூட விழாது. ஒருநாள் திடீர்னு மனுஷ்யபுத்திரனை திட்டி பதிவு எழுதினார். ஐம்பது லைக் விழுந்தன. அப்புறம் கவின்மலரை அசிங்கமாக திட்டி பதிவு எழுதினார். நூறு லைக் விழுந்தது. அப்புறம் கருணாநிதியை திட்டுறது. ஜாதி சங்கங்களோடு கூட்டணி என்று ஐநூறு ஆயிரம் லைக் விழ எல்லாரையும் ஆபாசமா திட்டுறதையும், ஆதாரம் இல்லாம சாணியை அள்ளி வீசுறதுமா அவர் பெயர் பேஸ்புக்கில் பேமஸ் ஆனது. இப்ப என்னடான்னா காங்கிரஸ்ல சேர்ந்துட்டார் என்று படித்தேன்.

கிஷோர் போன்ற தெளிவான சிந்தனையும் ,கடுமையான உழைப்பும் ,பொதுநோக்கும் கொண்ட இளைஞர்கள் காங்கிரசுக்கு வலுச் சேர்ப்பார்கள் 
---ஜோதிமணி 

இதெல்லாம் காலக்கொடுமை இல்லாம என்ன? இந்த நாலு வருடத்தில் நானும் ஆயிரக்கணக்கான பதிவுகள் எழுதி இரண்டு நாவலும் எழுதிட்டேன். அடுத்த வாரம் பதினைந்தாம் தேதி டிஸ்கவரி புக் பேலஸில் என்னோட நாவல் விமர்சனக்கூட்டம் உள்பட ஐந்து நாவல்களை பற்றிய கலந்துரையாடல் இருக்கு மதிய உணவு,தேநீர் இலவசம். வாங்கன்னு சொன்னா (முந்தைய பதிவை பாருங்க) ஒரேயொரு லைக் விழுந்திருக்கு. சமகாலத்தை நினைத்தால் கொடுமையாக இருக்கிறது. இந்த நாலு வருடத்தில் பிச்சை எடுத்திருந்தா கூட நாலு காசு பார்த்திருக்கலாம் போலிருக்கு.

Like ·  ·