Monday, March 30, 2015

Tamil Epics Conference at Kuala Lumpur, Malaysia: Bharathanatyam performance: Sangam Dances

ஐப்பெருங்காப்பிய மாநாடு சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்தது. தமிழின் மூத்த இலக்கியங்களை இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் இம்மாநாடு மலேசிய இளைஞர்களால், குறிப்பாக தனேஷ் பாலகிருஷ்ணன் போன்றோரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முதல் நாள் முழுவதும் ஆய்வுக் கட்டுரைகள். இரண்டாம் நாள் நாட்டிய நாடகம். குருவாயூர் உஷாதுரை அவர்களின் இயக்கத்தில் ஐம்பெரும் காப்பியங்களும் மேடை கண்டன. Broadway showவில் வருவது போல் நர்த்தகர்களை இயங்க வைத்தது அழகு. எங்கோவொரு கோபி கிருஷ்ணா, ஒரு கேளு சரண் ஒரு ரம்லி. அவ்வளவுதான். It was a joy to see young handsome males performing baratha natyam. பெண்கள் அழகு என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கண்ணகிக்கு ஒத்து மாதவியை உயர்த்திக் காட்டினர். குண்டலகேசி காட்டும் பெண் புதுமையானவள். இலக்கியத்தை முடக்கிவிட்டால் சுதந்திரக்குரல் சமூகத்தில் கேட்காமலே போய்விடும். எப்படியோ அன்றே ஒரு 'பாரதிராஜா' இருந்திருக்கிறார். அக்காப்பியங்கள் எல்லாம் வணிகர் குலத்தைச் சுற்றியே வருவது பௌத்த, சமண மதங்கள் எவ்வளவுதூரம் வணிகர்களைச் சார்ந்திருந்தன என்பதைக்காட்டுகிறது. தென்னாசிய, தூரகிழக்கில் பௌத்தம் பரவ இதுவே காரணம். இவையனைத்தும் சங்ககாலமா? இப்படி இந்த நாடக நிகழ்ச்சி சிந்திக்க வைத்தது. அடுத்த நாள் ஒரு இலக்கியக்கூடல் எற்பாடு செய்திருக்கலாம்! To inspire youngsters!

Sunday, March 29, 2015

Kamba Ramayanam, Karl Marx and Naxal Lawyers


உண்மைகள்

எதுசரி எதுதவறு என்று நாம் முடிவு செய்யுமுன் ஆயுள் முடிந்துவிடுகிறது ,அல்லது சமூக நியதிகளே மாறிவிடுகின்றன . 1853ம் ஆண்டில் கார்ல் மார்க்ஸ் என்ற அறிஞர் ஜெர்மனியில் சிந்திக்கவும் எழுதவும் வாய்ப்பின்றி இங்கிலாந்தில் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் உட்கார்ந்து டாஸ்காபிடா என்ற , அவருடைய பரம எதிரிகள்கூட மறுத்தாலும் மறக்கமுடியாத , ஒரு
நூலை எழுதி வைத்தார்.

அதைப் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத வயதில்
நான் படித்துவிட்டு , உலகத்தைக் காக்க எழும்பிய
சீ குவேரா ரசிகனாக ஆரம்பித்து வங்காள நக்ஸல் பாரியில்
சாறு மஜூம்தார் தொண்டனாக வளர்ந்தேன் . வழக்குரைக்கும்
தொழிலில் சேர்ந்த பிறகு சட்டமும் இடதுசாரி அரசியலு  
ஒன்றுக்கு ஒன்று முரணாகத் தோன்றியதில் ஒருசுயநல
வாதியாக அரசியலை இரண்டாம் பட்சமாகக்கொண்டேன் .
இடது சாரி சிந்தனை 1962ல இர்ண்டாக பிரிந்ததும்  
சிறை செல்வதைத் தவிர்க்க சோஷலிசப்போர்வையை  
போற்றிக் கொண்டு கம்யுனிஸ்ட் நண்பர்களை மட்டும்  
நண்பர்களாகவே வைத்துக் கொண்டு கட்சியைவிட்டு  
விலகினேன் .

ஆதிசங்கரரின் "பஜகோவிந்தம் மூட மனமே " 
என்ற கருத்து என்னை அவ்வளவாக ஆட்கொள்ளவில்லை . 
ஆனாலும் அவர் சொன்ன "மரணத்தைத் தழுவும்போது  
இலக்கணம் மறைந்து விடுகிறது " என்ற வடமொழிக்  
கவிதையின் தமிழாக்கம் என்னை ஈர்த்தது .

பின்னால் அதேபெயர் கொண்ட மதத்தலைவரை 
தமிழக காவல்துறை ஒரு கொலை வழக்கில் கைது 
செய்தபோது தெய்வத்துக்கு என்றும் கட்டுப்படாத என்  
மனச்சாட்சி தமிழக அரசுக்கு நன்றி செலுத்தியது . 
ஒரு தொலைகாட்சி நிறுவனம் அதை பதிவு செய்து 
என்னை பல சுத்தப் பிராமணர்களின் "பிடி சாபம் "
என்ற வசைக்கு ஆளாகியது . இதையெல்லாம் ஏன் 
வெளியே சொல்கிறாய் ? என்று கேட்காதீர்கள் . என்  
சிந்தனைகள் நான் இறந்தவுடன் என்னுடன் புதைபடவோ  
எரிக்கப் படவோகூடாது என்பதற்காகத்தான் .

நான் நடிகனாவதற்குமுன் வழக்குரைப்போனாக 
செயல்படும்போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் 
அறிவுலகம் போற்றும் நடிகனாகவும் திரு எம் .ஜி .ஆர் . 
அவர்கள் ஒரு கெட்டிக்கார அரசியல் வாதியாகவும்  
போற்றப் பட்டார்கள் . அப்போது நான் இராமநாதபுரம் 
மாவட்டத்தில் சுதந்திர இந்தியாவிலே குற்ற சட்டத்தை 
மீறுபவர்களை தக்க தண்டனையிலிருந்து தப்பவைக்கும்  
குறுக்குவழியை தேடி , சிந்தித்து செயல்பட்டுக் கொண்டு 
இருந்தேன் . 

அதன்பின் எத்தனையோ நிகழ்வுகள் ! என்னுடைய  
சுயசிந்தனை ஆண்டுகளில் கேட்டுச் செரிமான்மாகாத
கணக்கில் அடங்காத பொய்கள் . அதற்கு முன் ஐந்து ஆண்டு 
காலம் கல்லூரி செல்லும்வரை , என் சுயதயாரிப்பில் சில 
கணிசமான பொய்கள் தற்காப்புக்கும் சுயலாபத்துக்கும் 
தேவைப்பட்டன .  
அதன்பின் ஆங்கிலமுறை சட்டம்படித்து ,
குற்றவியல் நடைமுறை சட்டத்தால் அனுமதிக்கப் பட்டு ,
விவாதத்தில் அழகாக தொடுக்கப்பட்ட தொழில் -பொய்கள் !

ஆறுநூரு சகடத்தடிசிலும்  
நூருனூரு குடங்களும் நுங்கினான்  
ஏறுகின்ற பசியை எழுப்பினான்  
சீறுகின்ர செங்கண் முகத்தினான் .

என்ற கம்ப இராமாயண அடிகளை படித்தாலும்  
புரிந்துகொள்ள முடியாத…. , சேது கால்வாயை எதிர்க்கும்  
பக்தர்களுக்கு பாதம் பணிந்திருக்கிறேன் .

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி 
துப்பார்க்குத் துப்பாயது(உ) மழை 

என்பது எ .கே . 47 பற்றி எழுதப்பட்டது விளக்கம்கூறி 
முக்காபலாவையும் முஸ்தபாவையும் தூய தமிழாக்கி , தம் 
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று உப்புக்குச் 
சப்பாணி உயில் எழுதியவர் களுக்கும் மரண சாஸனம்  
தயாரித்து அதன் எழுத்து `மூலவர் ' என்று எனக்கு  
நானே பட்டமும் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் .


Kamba Ramayanam: Tamill Literature Classics


”அப்பா, ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன். கேக்கட்டுமா?”
“கேளு” என்றேன், கம்பராமாயணம் புத்தகங்களை ப்ளாஸ்டிக் உறைகளிலிருந்து எடுத்தபடியே. புது ஆக்டிவா கேக்கறானோ?
“கம்பராமாயணம் , ஒரு புத்தகம்..ஓகே. எதுக்கு இப்படி டிக்ஷனரி சைஸ்ல 7 புக்? இன்னொன்னு வச்சிருக்கீங்களே? ஒரேயொரு புக்? அது போதாதா?”
“அத்தனை பாடல்களையும் படிக்கணும்னா ஏழு புக் வேணும்டா. அதுவும் அனுபவிச்சு அனுபவிச்சு வை.மு. கோபால க்ருஷ்ணமாச்சாரியார் எழுதியிருப்பார். அதப் படிச்சா இன்னும் பல கோணங்கள்ல அதே ராமாயணத்தைப் பார்ப்போம்”

“ராமாயணம் ரொம்ப லீனியர் கதைன்னு சொல்லியிருக்கீங்க. நேரா இருக்கற கதையில எப்படி பல கோணமாப் பாக்கமுடியும்?”

பயல் பரவாயில்லையே என நினைத்துக் கொண்டேன்.

’இரு’ என்றவாறே புத்தகங்களில் தேடினேன். ஒரு Rack. அதுல 5 ஷெல்ப் என்று இரு rackகளை ஒவ்வொரு அறையிலும் செய்து வைத்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்கள் அதில் குடியேறிவிட்டன. 
ஒவ்வொரு ஷெல்ஃபிலும் மூன்று வரிசைகளாக இரு அடுக்குகள். இதில் ராமாயணம், மகாபாரதத்தைத் தேடுவது கொஞ்சம் கஷ்டம்தான். ஒவ்வொன்றும் யானை சைஸ்.

“ஆரண்ய காண்டமும், யுத்தகாண்டம் இர்ண்டாம் பகுதியும் ரெண்டாவது ஷெல்ஃப்ல இருக்கா பாரு”
அனைத்தையும் எடுத்து ப்ளாஸ்டிக் உறை நீக்கி, இரண்டையும் எடுத்து வைத்தான்.
ஆரண்ய காண்டத்தை எடுத்தேன். “இதுல பாரு அபி. மூக்கு அறுபட்டதும் சூர்ப்பனகை ராவணன்கிட்ட ஓடிப்போய் புலம்பறதோட நிக்கலை. ரொம்ப வஞ்சகமா,’சீதை எவ்வளவு அழகு தெரியுமா? அவளை நீ கொண்டால்தான் சரியாயிருக்கும்”னு ஆசை மூட்டறா. அதுல உருகிப்போறான் ராவணன். இது தெரியுமில்லையா உனக்கு?”

”நல்லாவே” என்றான் மகன். இதுல என்ன இருக்கு?. சின்ன பகுதி என்று நினைத்திருக்கக்கூடும்.

”கம்பன் சொல்றான். ராவணனைப் பத்தி. “சீதையை சிறையெடுக்கறதுக்கு முன்னாடியே, இப்படி நினைப்பாலேயே அவளை தன் நெஞ்சுல சிறை வைச்சுட்டான். அவன் மனசு கொஞ்சம் கொஞ்சமா அழிகிறதை, வெயில்ல வைச்ச வெண்ணை மாதிரி அவன் நெஞ்சு உருகிச்சு’ங்கறான் கம்பன்.

மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட
எயிலுடை இலங்கை வேந்தன் இதயமாம் சிறையில் வைத்தான்.
அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற் றன்றே”

“ஸோ?” 

யுத்தகாண்டம் இரண்டாம் பாகம் எடுத்தேன். ரொம்பவே தடியான புக் அது. 
“ராவணன் செத்துப் போயாச்சு. விபீஷணன் அழுதாச்சு. இப்ப மண்டோதரி ஓடி வர்றா. அவ புலம்பறா. “சிவனோட கைலாசத்தை தூக்கியெடுத்தாய் நீ. அப்படி பலமுள்ள உனது உடல்ல ஒரு இடம் பாக்கி விடாம, ஒருத்தனோட அம்பு துளைச்சிருக்கு. சீதையை உன் நெஞ்சுல சிறை வைச்சியே, அதுக்குக் காரணமான காதல் எங்க இருக்குன்னு உன் உடம்பு முழுசும் அந்த அம்பு துளைச்சுப் பாத்திருக்கோ?”ங்கறா.

“வெள்ளெருக்கஞ்ச் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி இழைத்தவாறோ
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?”

”ஓ!” 

“ஸீ, ராவணன் சீதையை மனசுல நினைச்சதுக்கும் மண்டோதரி அதைச் சொல்லறதுக்கும் நடுவுல எட்டாயிரம் பாடல்கள் ஓடியிருக்கும். ஆனா, அந்த தொடர்ச்சி பாரு.. ஒரு இடத்துல கூட , இந்த தொடர்ச்சி அறுந்துடாம எழுதியிருக்கான் கம்பன். ரெண்டு பாட்டையும் தனித்தனியா படிச்சாலும் நல்லா இருக்கும். ரெண்டுக்கும் உள்ள தொடர்ச்சியைப் பாத்தோம்னா “அடேங்கப்பா. இந்தா ஆளு மனுசனா?”ன்னு மலைச்சுப் போவோம். இப்படி படிக்கணும்னா எல்லா புக்கும் வேணுமா ,வேண்டாமா?”
“வேணும். வேணும்”
“ரைட். நீ ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படிக்கப் போலாம். ரொம்ப நேரம் வம்பளந்தாச்சு”

அவன் மவுனமாக எழுந்தான். சில நொடிகள் நின்று, அதன்பின் உள்ளே போனான்.

விதைகள் விழும்போது நிலங்களும் சற்றே அசையும். என்றோ ஒருநாள் அவனும் கம்பராமாயணத்தை கையில் எடுக்கக்கூடும்.

Like · Comment · 

Wednesday, March 25, 2015

Tuition Center: Students and Teachers: Education Ads: 100% Pass Tutorial


ஒரு புதூ கதை சொல்லட்டா...

மாணவர்கள் விற்பனை. செம்ம லாபம்.

ஃபெயிலாகிவிடுவார்களோ எனும் நிலையில் இருப்பவர்கள் மட்டுமே ட்யூஷன் போனது அப்போ.

இது இப்போ. நல்லா படிக்கிற பசங்களும் ட்யூஷன் போகும்படி தள்ளப்படுறாங்க. இதுவும் உங்களுக்குத் தெரியும்.

சரி. நிற்க.

குப்புசாமி ரொம்ப நல்லா படிக்கிற ஒரு மார்க் மெஷின். அவன் ஒரு ட்யுஷன் செண்டரில சேர்கிறான்.

எல்லாருக்குமே தெரியும் அவனால் அதிக மதிப்பெண் மட்டுமே எடுக்க முடியும்ன்னு.

இப்ப அவன பத்தி தெரிஞ்ச அவனோட ட்யூஷன் செண்டரு ஓனர்....(கவனிங்க டீச்சர்ன்னு சொல்லல)..

“அடேய்.. குப்பு சாமி, நீ (இன்னொரு செண்டரு பேர சொல்லி) அவங்க வைக்கிற ஸ்காலர்ஷிப்பு பரிட்சை எழுது அதுல 75 சதவீதம் வாங்கினா அவங்க உனக்கு லம்ப்பா பத்தாயிரம் தருவாங்க.” (நா ரொம்ப நல்லவனாக்கும்)

அப்டீயே வண்டிய எடுத்துக்கிட்டு அந்த இன்னொரு செண்டருக்குப் போயி...

”எங்க செண்டரில குப்புசாமி படிக்கிறான். அவன் நிச்சயம் 98%எடுத்திடுவான் எங்ககிட்ட படிச்சாலும், படிக்காட்டாலுமே. அவன உங்க பரிட்சை எழுத சொல்றேன். அதுல அவன் ஜெயிச்சதும் (அதுல வேற உள்குத்து உண்டு) அவனுக்க்கு பத்தாயிரம் தந்திடணும். அவன உங்க பரிட்சை எழுத வைக்க எனக்கு ஒருலட்சம் தந்திடணும். ஏன்னா அவன் அதிக சதவீதத்தில ஜெயிச்சதும் உங்க இன்ஸ்ட்யூட் ஸ்காலர்ஷிப் கிடைச்சது, உங்க இன்ஸ்ட்யூட் உதவி கிடைச்சது எல்லாத்தையும் அவன் படத்த போட்டு நீங்க விளம்பரப்படுத்திக்கிடலாம்.”

ஆகா, குப்புவின் மூளையை வைத்து, செண்டர் ஒண்ணூ, செண்டர் ரெண்டு இருவருக்கும் பெயர். அவன் அப்பாவுக்கு தன் பையன் பேருல ரெண்டு செண்டர் விளம்பரப்படுத்தி ஊர் பூரா தட்டி வைப்பாங்க கொஞ்சம் பீத்திக்கலாம்.

குப்பு..? பாவம் அவன் அடுத்த செட்டு மனப்பாடம் பண்ணோணுமில்லா? அத பேப்பரில வாந்தி எடுக்கணுமில்லா?


Tuesday, March 24, 2015

Poonkuzhali Fiction at Uyirmmai: Review by Author Imayam: Critic by Writer Ambai


பூங்குழலியின் ”நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” புத்தகத்தை இமையம் மார்ச் மாத உயிர்மையில் விமர்சித்திருக்கிறார். அதே இதழில் வெளிவந்திருக்கும் அவருடைய ”உண்மைக் கதை’ சிறுகதையைப் படித்து ரசித்துவிட்டு இந்த விமர்சனத்துக்கு வந்தபோது கீழ்க்கண்ட வரிகள் கண்களைக் குத்தின:

”பூங்குழலி பெண். அவருடைய கவிதைகளில் எங்குமே கண்ணீர் இல்லை. புகார், புலம்பல், பரிதவிப்பு, குறை கூறல், ஆண் மீதான பகை, வெறுப்பு துளியும் இல்லை. ஆச்சரியம். அதே மாதிரி முலை, யோனி, மாதவிடாய், வலி, பெண் உடல், உடல் மொழி, உடல் அரசியல், ஆண் அறியா ரகசியம் போன்ற சொற்கள் ஒரு இடத்திலும் இல்லை. இதுதான் அவருடைய சொற்களைக் கவிதையாக்கி இருக்கிறது. தன்னை உணர்தல், தான் வாழும் காலத்தை எழுதுவது கவிதை என்பதை உணர்ந்தது மட்டுமல்ல, அதை உயிருள்ள சொற்களால் எழுதியிருக்கிறார்…” 

கிராமத்துப் பெண்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் மனத்தைத் தொடும்படி எழுதுபவர் இமையம். அத்தகைய பெண்களே அவரை எழுத வைப்பவர்கள் என்று கூறுபவர். அவர் கதைகளிலிருந்துதான் பெண்கள் வாயிலிருந்து வெளிப்படும் உலக்கை, குஞ்சி, தடி, சாமான் என்ற ஆண்குறிக்கான சொற்களும் பெண்ணின் மறைவிடத்தைப் பற்றிய இன்னும் பல சொற்களும் தெரியவந்தன எனக்கு. அவற்றைப் படித்தபோதோ, அவர் கதைகளைப் பற்றிப் பேசும்போதோ அச்சொற்கள் வேண்டாதவை என்றோ, வலிய திணிக்கப்பட்டவை என்றோ எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. ஆனால் இமையத்துக்கு வேறு பல தளங்களில் இயங்கும் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய மிகவும் இளக்காரமான பார்வை இருக்கிறது என்பதை இந்த விமர்சன வரிகள் தெரிவிக்கின்றன. அவர்கள் யோனி. முலை என்று எழுதுபவர்கள் மட்டுமல்ல; அவர்களுக்குத் தெரிந்ததே புகார் செய்வதும், புலம்பலும் ஆண்களைக் குறை கூறுவதும்தான். அவர்கள் உடல் அரசியல் பேசுபவர்கள்; கவிதை எழுதத் தெரியாதவர்கள். தன்னையும் தான் வாழும் காலத்தையும் உணராதவர்கள். 

பூங்குழலியின் புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. இந்த விமர்சனத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் ஒரு வேளை படித்திருக்கலாம். இமையத்தின் கதைகளை மிகவும் விரும்பிப் படிப்பவள் நான். சமீபத்தில் வெளிவந்திருக்கும் ”சாவு சோறு” கதைத் தொகுப்பு குறித்து எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இமையம் நன்றாகக் கதைகள் எழுதினால் மட்டும் போதாது. அவர் கதைகளில் வரும் பெண்கள் நம் ”பண்பாட்டின் குரல்கள்” என்று அவர் கூறுவதுபோல் இருந்தால் மட்டும் போதாது. அவர் மற்றவர்களின் எழுத்துக்கும் மதிப்புத் தர வேண்டும். அவர்கள் வேறு தளங்களில் இயங்கி, வேறு கவிதை மொழி ஒன்றை உருவாக்குவது அவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அது அவர் விருப்பம். ஆனால் அதை எள்ளுவதும், இளக்காரம் செய்வதும் அவரைப் போன்ற மூத்த எழுத்தாளருக்கு சோபை தரக்கூடிய செயல் அல்ல.

Like · Comment · 
  • Jeevasundari Balan ஏற்கனவே இம்மாதிரியான பல விமர்சனங்களைச் செய்தவர்தானே அம்பை. அவருக்கு அது பழகிப் போய் விட்டது. நாம்தான் நிறைய எதிர்பார்க்கிறோமோ என்று தோன்றுகிறது.
    5 hrs · Like · 3
  • Lakshmi Chitoor Subramaniam இல்லை ஜீவா, எனக்கு அவரைப் பல ஆண்டுகளாகத் தெரியும். என் நண்பர். சமீபத்தில் கூட மும்பாய் வந்தபோது சந்தித்து நிறையப் பேசினோம். அவருக்கு நகர்ப்புறப் பெண்களைப் பற்றிய சில அபிப்பிராயங்கள் உண்டு. ஆனால் இப்படி மட்டமாகப் பெண் எழுத்தாளர்களைப் பற்றி என்னிடம் எப்போதும் பேசியதில்லை அவர்.
    5 hrs · Like · 4
  • தமிழ்நதி நதி சாதாரணமான புழங்குவெளியில் இருப்பவர்களைவிட, பொதுவெளியில் இருப்பவர்கள்தாம் அதிகமும் பெண்கள்மீதும் அவர்கள் எழுத்துமீதும் அதிகாரம் செலுத்துபவர்களாயிருக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.
    5 hrs · Like · 5
  • Jeevasundari Balan நகர்ப்புறப் பெண்களின் எழுத்து, நடவடிக்கைகள் பற்றி சில கூட்டங்களில் அவர் பேசியதுண்டு.
    5 hrs · Like · 3
  • Lakshmi Chitoor Subramaniam நான் கேட்டதில்லை. என்னிடமும் அப்படிக் கூறியதில்லை.
    5 hrs · Like · 1
  • Lakshmi Chitoor Subramaniam சந்திரா பற்றிய நிகழ்வில் கூட நான் எந்த அர்த்தத்திலும் பேசவில்லை. வேண்டுமானால், நீங்கள் கூறினால் மன்னிப்புக் கேட்கிறேன் என்று என்னிடம் தொலைபேசியில் கூறினார்.
    5 hrs · Like · 2
  • Kirthika Tharan ஏன் பெண் எழுத்தாளர் என்று இங்கு பெரிதாக குறிப்பிடுகிறார்கள்..படைப்பாளிகள் என்று வந்தப்பிறகு ஆண் என்ன பெண் என்ன? இதில் உள்ள அரசியல்கள் புரிவதே இல்லை..

    இன்னொன்று பெண் ஓவியர், பெண் பாடகி போன்ற இடங்களிலும் இது பெண் வரைந்த ஓவியம அதனால் எடுப்பாக போட்டிருக்காங்க..பெண் பாடிய பாட்டு..அதான் ஸ்ஸ், ஆஆ...ம்ம்ம்ம் சத்தம் வருதுன்னு சொல்லுவார்களா?

Monday, March 23, 2015

Yuhi Sethu: Kavidhai Paada Neram Illai: Naiyaandi Dharbar

பல வருடங்களுக்குப் பிறகு இன்று என் நெருங்கிய நண்பரும்,திரைப்பட இயக்குநரும்,நடிகருமான யூகி சேதுவை சிறிதும் எதிர்பாராமல் சந்தித்தேன்.'கவிதை பாட நேரமில்லை' என்ற அருமையான திரைப்படத்தில் பல வருடங்களுக்கு முன்பு கதாநாயகனாக நடித்து,அதை இயக்கியவர் இவர்.யூகி சேது கதாநாயகனாக நடித்து,இயக்கிய படம் 'மாதங்கள்-7'.அதில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யாகிருஷ்ணன்.அந்தப் படத்திற்கு நான் பி.ஆர்.ஓ.
வருடங்கள் கடந்தோடி விட்டன.'நையாண்டி தர்பார்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிரில் அமர்ந்திருப்பவரை கேலி,கிண்டல் சகிதமாக கேள்விகள் கேட்டு அவர்களை மடக்கி,நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக ஆக்கிய போதும்,கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து அனாயாசமாக கலக்கிய போதும் யூகி சேதுவின் அபாரமான திறமையைப் பார்த்து,வியப்பின் உச்சிக்குச் சென்றிருக்கிறேன்.'நம் நண்பரிடம் இவ்வளவு பெரிய திறமைகள் மறைந்திருக்கின்றனவே!' என்று ஆச்சரியப்பட்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
என்னுடைய மொழி பெயர்ப்பு படைப்புகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசினார் சேது.நான் பெரிதும் சந்தோஷப்பட்ட இன்னொரு விஷயம்- தமிழில் தயாராகும் மலையாள 'ஷட்டர்' படத்தின் மொழி மாற்ற ஆக்கத்தில்,திரைப்பட இயக்குநர் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் யூகி சேது.அந்த கதாபாத்திரத்தில் சேது முத்திரை பதித்திருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

'பல வருடங்களுக்குப் பிறகு இன்று என் நெருங்கிய நண்பரும்,திரைப்பட இயக்குநரும்,நடிகருமான யூகி சேதுவை சிறிதும் எதிர்பாராமல் சந்தித்தேன்.'கவிதை பாட நேரமில்லை' என்ற அருமையான திரைப்படத்தில்  பல வருடங்களுக்கு முன்பு கதாநாயகனாக நடித்து,அதை இயக்கியவர்  இவர்.யூகி சேது கதாநாயகனாக நடித்து,இயக்கிய படம் 'மாதங்கள்-7'.அதில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யாகிருஷ்ணன்.அந்தப் படத்திற்கு நான் பி.ஆர்.ஓ.
வருடங்கள் கடந்தோடி விட்டன.'நையாண்டி தர்பார்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிரில் அமர்ந்திருப்பவரை கேலி,கிண்டல் சகிதமாக கேள்விகள் கேட்டு அவர்களை மடக்கி,நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக ஆக்கிய போதும்,கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து அனாயாசமாக கலக்கிய போதும் யூகி சேதுவின் அபாரமான திறமையைப் பார்த்து,வியப்பின் உச்சிக்குச் சென்றிருக்கிறேன்.'நம் நண்பரிடம் இவ்வளவு பெரிய திறமைகள் மறைந்திருக்கின்றனவே!' என்று ஆச்சரியப்பட்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
என்னுடைய மொழி பெயர்ப்பு படைப்புகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசினார் சேது.நான் பெரிதும் சந்தோஷப்பட்ட இன்னொரு விஷயம்- தமிழில் தயாராகும் மலையாள 'ஷட்டர்' படத்தின் மொழி மாற்ற ஆக்கத்தில்,திரைப்பட இயக்குநர் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் யூகி சேது.அந்த கதாபாத்திரத்தில் சேது முத்திரை பதித்திருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?'

Mugamoodi Seibaval: Vinodhini: Tamil Poetry Reviews: Books & Poems


எப்போது தத்தளிக்கும், எப்போது நிதானமாகும் என்று அறியா மனது எனக்கு உரித்து. என்றும் போல விளிம்பில் சிதறத்துடிக்கும் கணங்களை வாசிப்புடன் தாண்டிச் செல்லவே இம்முறையும் முயற்சித்திருந்தேன். அண்மைக்காலமாய் கவிதைகளை நிதானமாய் இரசித்து முழுமையாய் வாசிக்கும் மனதையும் தொலைத்தே விட்டதாகவே உணர்ந்திருந்தேன். தமிழில்தான் இப்படித் தோன்றுகின்றதோ என யோசித்து, ஆங்கிலத்தில் வந்த தொகுப்புக்களையோ அல்லது சஞ்சிகைகளான American poetry review போன்றவற்றையோ வாசித்தாலும் அவற்றை வார்த்தைகளாய் மட்டும் இயந்திரத்தனமாய் வாசித்துக்கொண்டுபோகின்றேன் போன்ற நினைப்பே வந்தது.

தற்செயலாய் இன்று சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருந்த வினோதினியின் 'முகமூடி செய்பவள்' ஐ எடுத்து வாசிக்கத் தொடங்கியபோது சட்டென்று உற்சாகமான மனோநிலைக்கு வந்ததைப் பார்க்க அதிசயமாயிருந்தது. எப்போதும் ஒரு தொகுப்பை வாசிக்கும்போது அதில் ஐந்தோ/பத்தோ கவிதைகள் என் மனதிற்கு நெருக்கமானதாய் மாறிவிட்டால் அதை ஒரு முக்கிய தொகுப்பாய் நினைத்துக்கொள்கின்றவன், நான். இதில் இப்படி நிறையக் கவிதைகள் இருந்ததால் சோர்ந்த மனது குதூகல நிலையை அடைந்ததோ தெரியவில்லை. நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு கவிதைத் தொகுப்பிற்கு விரிவாக விமர்சனம் எழுதவேண்டும் என்கின்ற எண்ணத்தையும் இது தந்திருக்கின்றது. பார்ப்போம்.

இப்போது சில கவிதைகள்:

அடையாளம்

பிறந்த நாள் முதல்
இன்று வரை
எனக்கான அடையாளங்கள் பல.
அறிமுகங்கள் நிகழ்தலும்
அவற்றின் மூலமே

மகள் மருமகள் பெறாமகள் பேத்தி என
நீண்ட பட்டியல் இன்னும் நீள்கிறது
இற்றை வரை

பள்ளிக்கூடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பல
அலுவலகத்தில் கறுப்பழகி
தலை நகரில்
பலர் இந்தியாக்காரி
சிலர் பறைத் தமிழச்சி என்றும் வியக்க
ஊரிலோ வேறு வழக்கு
திமிர் பிடித்தவள்
பெண்ணா இவள் என்றனர்

பெண்ணே என்றேன் உரத்து
(2001)
.............

தமிழன்

மழை தொடாத வானம்
வெயில் சுகித்த நேரம்
நெடுந்தூரம் நடந்த களை
அலுவலக நண்பன் ஜோனும் நானுமாக
அவக்காடோ பழச்சாறு ருசிக்கையில்
அருகே வந்தான் அவன்

தமிழனுடையது கிடைக்கவில்லையோ
என்ற முணுமுணுப்புடன் காதுக்குள்

ஒரு கணம் உலகப் பெண்களின் கோபமெல்லாம்
என்னுள் ஊறியதை உணருமுன்
அவன் போய்விட்டிருந்தான்

இந்திரன் போல் உடலெங்கும் குறிகளோடு
அவனைப் படைத்து
ஒவ்வொன்றாய்ச் சீவி எறிதல் வேண்டும் நான்
(2003)

மேலே 'அடையாளம்' என்றெழுதப்பட்ட் கவிதை ஆழியாளின் 'பிறந்தவீட்டில் நானொரு கறுப்பி' எனத் தொடங்கும் கவிதையை ஞாபகமூட்டியது. இது ஒன்றின் பாதிப்பில் மற்றதில் இருக்கிறதென அதிகம் ஆராயாமல் எந்த ஒரு பெண்ணும் தனக்குரிய 'அடையாளம்' எதுவெனத் தேடும்/திணறும் வெவ்வேறு தனித்துவமான கவிதைகளாய் இவையிரண்டையும் நாம் பார்க்கமுடியும்.

ஒரு பெண்ணை எந்த ஒரு ஆணும் அடக்கிவிடமுடியும். ஆனால் அவளுக்கு மறைமுகமாய்ப் பழிவாங்கவும் தெரியும் என்பதை நுட்பமாய்ச் சொல்லும் ஒரு நீள்கவிதையில் முதற்பகுதி இவ்வாறாக...

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல

காதலித்த நாட்களில் 
பகிர்ந்த முத்தங்களும்
பேசிய பல கதைகளும்
இருவருமாக நட்சத்திரங்களை வியந்ததும்
கடலைப் பாடியதும்
அவன் நினைவினிலில்லை.

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல.
இருளில் அவள் மீது படரும் அவன் மூச்சும்
அவள் விருப்பின்றித் தொடைகளைப் பிரிக்கும் விரல்களும்
அவளுக்கு ஒரு பொருட்டல்ல

நடு இரவில் தீச்சுடர்களென ஒளிரும்
இமைக்காத அவள் கண்களும்
தொடுகையில் நெகிழாத அவள் உடலும்
அவனை மறுதலிக்க
பெருமூச்சுடன் மறுபக்கம்
திரும்பித் துயில்கிறான் அவன்

புன்னகைத்தபடி யன்னலூடாகத் தெரியும்
நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குகின்றாள் அவள்.
.............

இத்தொகுப்பிலேயே எனக்கு மிக நெருக்கமாய் ஆன கவிதை ஒன்றிருக்கிறது, அது...

ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு கவிதை

கடந்த நாட்கள் போலவே
இதுவும் இன்னொரு நாள்
மழையோ பனியோ அன்றி உணர்வோ
அதை மாற்றவோ பிற்போடவோ முடியாது.

அவன் எப்போதும் போலவே விழிக்கிறான்
யன்னலில் படிந்திருக்கும் பனியை முதன் முதலாகப்
பார்ப்பது போலப் பார்க்கின்றான்

அறையைச் சுற்றிவர அளவெடுக்கின்றன அவன் கண்கள்
ஒரு மெழுகுவரத்தியோடு கேக் இருக்குமா என்ற ஆவலில்
அன்றி ஒற்றை மலராவது,
இல்லை, இல்லவே இல்லை. அதற்கு வாய்ப்பில்லை.

அவன் உடைகளையும் இரவு படித்த புத்தகத்தையும்
பியர்க் குவளையும் தவிர வேறென்ன?

தன் தனிமையை உணர்ந்துகொள்கிறான்
ஒற்றை வாழ்த்துக்கூட இல்லை.
அவனது அறைக்குள் வர அவை எதற்கும் அனுமதியில்லை.
ஒரு சிறு பரிவுக்கேனும் விதியின்றி
வெறுமை சூழந்ததாகவே அந்நாளும்.
இருந்தும் அது அவனது வாழ்க்கை
கண்களைத் துளைத்தபடி துளிர்த்து விழுகின்றன துளிகள்
அவனால் அந்த நாளையும் வரவேற்க முடியவில்லை
பதிலாக அவன் தனக்கான
வாழ்த்துப்பாவைப் புனையத் தொடங்குகின்றான்.

உண்மையில் இந்தக் கவிதை முடிகின்ற இடந்தான் இன்னும் பிடித்திருந்தது. இவ்வளவு தனிமையுடனும் துயரத்துடனும் இருக்கும் ஒருவன் பெரும்பாலும் தனக்கான சாவுப்பாடலைத்தான் பாடக்கூடியவனாக இருப்பான் என நாம் நினைக்கும்போது, வினோதினி அந்த 'ஒருவனுக்கு' வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கின்றார். வாழ்தல் என்பது நம்மை நாமே நேசிப்பதிலிருந்தும் தொடங்கலாமென்கின்ற ஒரு சிறுவிதையை வாசிக்கும் நம்மிடையே ஊன்றவும் செய்கின்றார்.

பெண் என்கின்ற தனக்கான அடையாளத்தைத் தேடும், வேற்றின ஆணோடு பழகுவதைப் பிடிக்கவில்லையெனச் சொல்கின்றவனுக்கு சாபமிடுகின்ற, தன்னை உதாசீனம் செய்கின்ற ஆணை நுட்பமாய் பழிவாங்குகின்ற பெண் மனதுதான், தனித்து துயரத்தோடு இருக்கும் ஒரு ஆணைப் பரிவுடனும் அணுகச் செய்கின்றது. அந்த ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான கவிதையை நீயே புனையென அவனுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

நன்றி Vinothini Satchithananthan

'எப்போது தத்தளிக்கும், எப்போது நிதானமாகும் என்று அறியா மனது எனக்கு உரித்து. என்றும் போல விளிம்பில் சிதறத்துடிக்கும் கணங்களை வாசிப்புடன் தாண்டிச் செல்லவே இம்முறையும் முயற்சித்திருந்தேன். அண்மைக்காலமாய் கவிதைகளை நிதானமாய் இரசித்து முழுமையாய் வாசிக்கும் மனதையும் தொலைத்தே விட்டதாகவே உணர்ந்திருந்தேன். தமிழில்தான் இப்படித் தோன்றுகின்றதோ என யோசித்து, ஆங்கிலத்தில் வந்த தொகுப்புக்களையோ அல்லது சஞ்சிகைகளான  American poetry review போன்றவற்றையோ வாசித்தாலும் அவற்றை வார்த்தைகளாய் மட்டும் இயந்திரத்தனமாய் வாசித்துக்கொண்டுபோகின்றேன் போன்ற நினைப்பே வந்தது.

தற்செயலாய் இன்று சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருந்த வினோதினியின் 'முகமூடி செய்பவள்' ஐ எடுத்து வாசிக்கத் தொடங்கியபோது சட்டென்று  உற்சாகமான மனோநிலைக்கு வந்ததைப் பார்க்க அதிசயமாயிருந்தது. எப்போதும் ஒரு தொகுப்பை வாசிக்கும்போது அதில் ஐந்தோ/பத்தோ கவிதைகள் என் மனதிற்கு நெருக்கமானதாய் மாறிவிட்டால் அதை ஒரு முக்கிய தொகுப்பாய் நினைத்துக்கொள்கின்றவன், நான். இதில் இப்படி நிறையக் கவிதைகள் இருந்ததால் சோர்ந்த மனது குதூகல நிலையை அடைந்ததோ தெரியவில்லை. நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு கவிதைத் தொகுப்பிற்கு விரிவாக விமர்சனம் எழுதவேண்டும் என்கின்ற எண்ணத்தையும் இது தந்திருக்கின்றது. பார்ப்போம்.

இப்போது சில கவிதைகள்:

அடையாளம்

பிறந்த நாள் முதல்
இன்று வரை
எனக்கான அடையாளங்கள் பல.
அறிமுகங்கள் நிகழ்தலும்
அவற்றின் மூலமே

மகள் மருமகள் பெறாமகள் பேத்தி என
நீண்ட பட்டியல் இன்னும் நீள்கிறது
இற்றை வரை

பள்ளிக்கூடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பல
அலுவலகத்தில் கறுப்பழகி
தலை நகரில்
பலர் இந்தியாக்காரி
சிலர் பறைத் தமிழச்சி என்றும் வியக்க
ஊரிலோ வேறு வழக்கு
திமிர் பிடித்தவள்
பெண்ணா இவள் என்றனர்

பெண்ணே என்றேன் உரத்து
(2001)
.............

தமிழன்

மழை தொடாத வானம்
வெயில் சுகித்த நேரம்
நெடுந்தூரம் நடந்த களை
அலுவலக நண்பன் ஜோனும் நானுமாக
அவக்காடோ பழச்சாறு ருசிக்கையில்
அருகே வந்தான் அவன்

தமிழனுடையது கிடைக்கவில்லையோ
என்ற முணுமுணுப்புடன் காதுக்குள்

ஒரு கணம் உலகப் பெண்களின் கோபமெல்லாம்
என்னுள் ஊறியதை உணருமுன்
அவன் போய்விட்டிருந்தான்

இந்திரன் போல் உடலெங்கும் குறிகளோடு
அவனைப் படைத்து
ஒவ்வொன்றாய்ச் சீவி எறிதல் வேண்டும் நான்
(2003)

மேலே 'அடையாளம்' என்றெழுதப்பட்ட் கவிதை ஆழியாளின்  'பிறந்தவீட்டில் நானொரு கறுப்பி' எனத் தொடங்கும் கவிதையை ஞாபகமூட்டியது. இது ஒன்றின் பாதிப்பில் மற்றதில் இருக்கிறதென அதிகம் ஆராயாமல்  எந்த ஒரு பெண்ணும் தனக்குரிய 'அடையாளம்' எதுவெனத் தேடும்/திணறும் வெவ்வேறு தனித்துவமான கவிதைகளாய் இவையிரண்டையும் நாம் பார்க்கமுடியும்.

ஒரு பெண்ணை எந்த ஒரு ஆணும் அடக்கிவிடமுடியும். ஆனால் அவளுக்கு மறைமுகமாய்ப் பழிவாங்கவும் தெரியும் என்பதை நுட்பமாய்ச் சொல்லும் ஒரு நீள்கவிதையில் முதற்பகுதி இவ்வாறாக...

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல

காதலித்த நாட்களில் 
பகிர்ந்த முத்தங்களும்
பேசிய பல கதைகளும்
இருவருமாக நட்சத்திரங்களை வியந்ததும்
கடலைப் பாடியதும்
அவன் நினைவினிலில்லை.

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல.
இருளில் அவள் மீது படரும் அவன் மூச்சும்
அவள் விருப்பின்றித் தொடைகளைப் பிரிக்கும் விரல்களும்
அவளுக்கு ஒரு பொருட்டல்ல

நடு இரவில் தீச்சுடர்களென ஒளிரும்
இமைக்காத அவள் கண்களும்
தொடுகையில் நெகிழாத அவள் உடலும்
அவனை மறுதலிக்க
பெருமூச்சுடன் மறுபக்கம்
திரும்பித் துயில்கிறான் அவன்

புன்னகைத்தபடி யன்னலூடாகத் தெரியும்
நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குகின்றாள் அவள்.
.............

இத்தொகுப்பிலேயே எனக்கு மிக நெருக்கமாய் ஆன கவிதை ஒன்றிருக்கிறது, அது...

ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு கவிதை

கடந்த நாட்கள் போலவே
இதுவும் இன்னொரு நாள்
மழையோ பனியோ அன்றி உணர்வோ
அதை மாற்றவோ பிற்போடவோ முடியாது.

அவன் எப்போதும் போலவே விழிக்கிறான்
யன்னலில் படிந்திருக்கும் பனியை முதன் முதலாகப்
பார்ப்பது போலப் பார்க்கின்றான்

அறையைச் சுற்றிவர அளவெடுக்கின்றன அவன் கண்கள்
ஒரு மெழுகுவரத்தியோடு கேக் இருக்குமா என்ற ஆவலில்
அன்றி ஒற்றை மலராவது,
இல்லை, இல்லவே இல்லை. அதற்கு வாய்ப்பில்லை.

அவன் உடைகளையும் இரவு படித்த புத்தகத்தையும்
பியர்க் குவளையும் தவிர வேறென்ன?

தன் தனிமையை உணர்ந்துகொள்கிறான்
ஒற்றை வாழ்த்துக்கூட இல்லை.
அவனது அறைக்குள் வர அவை எதற்கும் அனுமதியில்லை.
ஒரு சிறு பரிவுக்கேனும் விதியின்றி
வெறுமை சூழந்ததாகவே அந்நாளும்.
இருந்தும் அது அவனது வாழ்க்கை
கண்களைத் துளைத்தபடி துளிர்த்து விழுகின்றன துளிகள்
அவனால் அந்த நாளையும் வரவேற்க முடியவில்லை
பதிலாக அவன் தனக்கான
வாழ்த்துப்பாவைப் புனையத் தொடங்குகின்றான்.

உண்மையில் இந்தக் கவிதை முடிகின்ற இடந்தான் இன்னும் பிடித்திருந்தது. இவ்வளவு தனிமையுடனும் துயரத்துடனும் இருக்கும் ஒருவன் பெரும்பாலும் தனக்கான சாவுப்பாடலைத்தான் பாடக்கூடியவனாக இருப்பான் என நாம் நினைக்கும்போது, வினோதினி அந்த 'ஒருவனுக்கு' வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கின்றார். வாழ்தல் என்பது நம்மை நாமே நேசிப்பதிலிருந்தும் தொடங்கலாமென்கின்ற ஒரு சிறுவிதையை வாசிக்கும் நம்மிடையே ஊன்றவும் செய்கின்றார்.

பெண் என்கின்ற தனக்கான அடையாளத்தைத் தேடும், வேற்றின ஆணோடு பழகுவதைப் பிடிக்கவில்லையெனச் சொல்கின்றவனுக்கு சாபமிடுகின்ற, தன்னை உதாசீனம் செய்கின்ற ஆணை நுட்பமாய் பழிவாங்குகின்ற பெண் மனதுதான், தனித்து துயரத்தோடு இருக்கும் ஒரு ஆணைப் பரிவுடனும் அணுகச் செய்கின்றது. அந்த ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான கவிதையை நீயே புனையென  அவனுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

 நன்றி @[764585961:2048:Vinothini Satchithananthan]'