Thursday, December 31, 2015

Best Tamil Books of 2015: DJ Thamilan

பிடித்த புத்தகங்கள்
-------------------------------
பட்டியல் இடுவதில் எனக்கு எந்தப் பொழுதிலும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் பிறர் எந்த நூற்களை வாசிக்கின்றார்கள்/திரைப்படங்களை இரசிக்கின்றார்கள்/இசையைக் கேட்கின்றார்கள் என்பதையறிவதில் ஆர்வம் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். நூலகங்களிற்குள்ளோ, புத்தகசாலைகளுக்குள்ளோ நுழையும்போது அவற்றின் எண்ணிக்கையைப் பார்த்து வியக்கும்போதெல்லாம் நல்ல புத்தகங்களைத் தவறவிடுகின்றேனோ என்று கவலைப்படுவதுண்டு. சட்டென்று யாரோ ஒருவர் எழுதிய சிறுகுறிப்பை வாசித்து அது நினைவுக்குள் வந்து அந்த நூலைக் கண்டுகொள்ளும்போது அறிமுகப்படுத்தியவர்க்கு மானசீகமாய் நன்றி கூறுவதுண்டு. இவ்வாறே திரைப்படங்களும், இசையிற்கும் எனக் கொள்க.
இந்த வருடம் முடிகின்றவேளையில் நான் இந்த ஆண்டு வாசித்த நூற்களில் பிடித்த புத்தகங்களை தந்திருக்கின்றேன். வாசித்த எல்லா நூற்களும் நினைவினில்லை. நினைவில் வந்தவற்றில் பிடித்த புத்தகங்கள் இவை.
நண்பர்கள் தாங்கள் இந்த வருடத்தில் வாசித்தவற்றைப் பகிர்ந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

-நிலவொளி எனும் இரகசிய துணை -எம்.டி.முத்துக்குமாரசாமி (கட்டுரை)
-Island of a Thousand Mirrors - Nayomi Munaweera (Novel)
-விடமேறிய கனவு - குணா கவியழகன் (நாவல்)
-லெனின் சின்னத்தம்பி - ஜீவமுரளி (நாவல்)
-இன்னும் வராத சேதி - ஊர்வசி (கவிதை)
-Ways of Going Home -Alejandro Zambra (Novel)
-மானுட யத்தனம் என்றால் என்ன - ராஜன் குறை (கட்டுரை)
-சிறு புள் மனது - திருமாவளவன் (கவிதை)
-Box கதைப் புத்தகம் - ஷோபா சக்தி (நாவல்)
-Numero Zero - Umberto Eco (Novel)

Friday, June 19, 2015

Jeyamohan speech at Toronto: Canada


நேற்று ஜெயமோகன் உரையாற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். வழமைபோல 'நேரத்திற்குச் சென்றதால்' அவரின் உரையைத் தவறவிட்டிருந்தேன். ஆனால் கேள்வி பதில்களைக் கேட்க முடிந்தது. கவிதைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, பாரதி, கு.ப,ரா, வானம்பாடி எனத் தொடர்ந்து வந்து நீட்சித்த பேச்சில் ஈழக்கவிதைகளுக்கு எந்த இடமுமில்லை. தன்னைக் கவனம் கோரும் இன்றைய கவிஞர்களில் தமிழகம் சார்ந்த கவிஞர்களைத் தவிர எந்தக் கவிஞர்களும் இல்லை என்பதற்கப்பால், ஒரு பெண் கவிஞர் கூட அவருக்கு நினைவில் வரவில்லை.

வழமைபோல மாற அடம்பிடிக்கும் ஜெமோவும், அவர் முன்வைப்பதோடு முரண்படுவதற்கென மாறாது இன்றுமிருக்கும் என்னைப் போன்றவர்களும்,,,,

ஆக, எம்.டி.எம் 'பாரதி விவாதத்தில்' எழுதியதை மீண்டும் எனக்கு நானே நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.

"ஜெயமோகனின் ரசனை விமர்சனம், நவீன textual criticismஆக இருந்தாலும் அவர் literary canonஐ உருவாக்குவார், literary canons மேலாதிக்க அதிகாரப் பண்புடையவை என்றும் அவருக்குத் தெரியும். அவர் கேட்பதெல்லாம் பின் நவீனத்துவ விமர்சனமும் அதிகாரத்தை, எந்த அறிவுச்செயல்பாட்டினையும் போல செயல்படுத்துவதுதானே என்பது. இங்கேதான் பின் நவீனத்துவ விமர்சன முறைமை வேறுபடுகிறது. அது முதலில் வாசிப்பை மேலும் மேலும் பூடகமாக்காமல், வாசிக்கும் முறையை வெளிப்படையாக்குகிறது. வாசகன் இலக்கியப் பிரதியோடு கொள்ளும் ஊடாட்டத்தை முதன்மைப்படுத்துகிறது. ஆசிரியர் மற்றும் விமர்சகர்களின் விசேஷ அதிகார பீடங்களில்லாமலேயே நமது வாசக அனுபவத்தை முதன்மைப்படுத்தியே இலக்கியப்பிரதிகளை படிக்கலாம் என்கிறது. ஜெயமோகன் இப்படி வழாவழா கொழகொழா என்று பேசிக்கொண்டேஇருக்காமல் அப்படி கொஞ்சம் ஓரமாய் உட்காருங்கள் என்று சொல்கிறது. நாங்கள் எங்களுக்கு வேண்டிய எங்களுடைய காலகட்டத்திற்கு வேண்டிய கவிதைகளை நாங்கள் தேர்ந்தெடுத்து சுதந்திரமாகப் படித்துக் கொள்கிறோம் என்று சொல்கிறது. அதாவது வாசிப்பை ஜனநாயகப்படுத்தி வாசிப்பின் அனுபவம் எப்படி அமைப்பாக்கம் பெறுகிறது என்று பார்க்கச் சொல்கிறது. தன் வாசிப்பை சுயவிமர்சனத்தோடு சுய எள்ளலோடு பார்க்கவைக்கிறது."

Name dropping Carnatic Singers and Tamil Musicians


புரந்தரதாசர், கனகதாசர், கபீர், மீரா, நாமதேவ், துக்காராம், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சல கவி, அருணகிரிநாதர், தனம்மாள், ராஜரத்தினம் பிள்ளை, ராஜமாணிக்கம் பிள்ளை, பழனி சுப்ரமணியப் பிள்ளை, பிருந்தா& முக்தா, மதுரை சோமசுந்தரம், எம்.எல்.வசந்தகுமாரி, எம்.எஸ். சுப்பலக்ஷ்மி, மாண்டலின் ஸ்ரீநிவாஸ், ஷேக் சின்ன மௌலானா, த்வாரம் வேங்கடசுவாமி நாயுடு, சீர்காழி கோவிந்தராஜன், நாமகிரிபேட்டை கிருஷ்ணன், பெரியசாமி தூரன், வலையப்பட்டி, ஹரித்வாரமங்கலம், பாபவிநாச முதலியார், மைசூர் சௌடையா, இரயிம்மான் தம்பி, சுவாதி திருநாள்,அண்ணாமலை ரெட்டியார், மைசூர் நாகராஜ், மஞ்சுநாத், டி.எம்.தியாகராஜன், உன்னிக்ரிஷ்ணன், காருக்குறிச்சி அருணாசலம், கிருஷ்ண ராஜேந்திர உடையார், திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை, யேசுதாஸ், ஜான் ஹிக்கின்ஸ்.... அப்டியே ஓடிப் போயிரு... இல்ல..!!

Thursday, May 28, 2015

Tamil Poems: Why you should read?


இன்றைய காலத்தில் கவிதைகளின் வகிபாகம் என்னவாக இருக்கின்றது? கவிதைகளை யார் வாசிக்கின்றார்கள் அல்லது யாருக்காக எழுதப்படுகின்றன. கவிதைகள் என்றில்லாது ஏனைய எல்லாக் கலைப்படைப்புக்களுக்குமாய் இந்தக் கேள்விகளை நாம் எழுப்பிப் பார்க்கலாம். எண்ணற்ற இலத்திரனியல் உபகரணங்கள் சூழ்ந்திருக்க, இன்னொரு பக்கத்தில் நமது ஆசைகள் தினமும் பெருக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், கலைக்கான இடம் என்னவென்று யோசிக்க வேண்டியிருக்கின்றது. இந்த இயற்கையைப் போல கலைப்படைப்புக்களும் நமதான வாழ்க்கைவெளியில் மிதந்தபடியிருக்கின்றன. எந்த ஒருவரால் நின்று நிதானித்து இயற்கையை இரசிக்கமுடிகிறதோ, அவர்களால் கலைகளை உள்வாங்குவதும் எளிதாக அமைந்துவிடுகிறது என நினைக்கின்றேன். 

கவிதைகளை வாசிக்க பொறுமையான ஒரு சூழலே வேண்டியிருக்கின்றது. நல்லதொரு கவிதையை பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவைக்கு உவமித்துப் பார்க்கின்றேன். அதன் பறத்தல் என்பது கணந்தோறும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதைப் போல, சிறப்பான ஒரு கவிதை வாசிக்கும் ஒவ்வொருபொழுதும் நமக்குப் புதுப்புது வாசிப்புக்களைத் தரக்கூடும். நீங்கள் சரியான கணத்தில் ஒரு கவிதையின் ஆன்மாவை பிடித்துவிட்டீர்களென்றால், கவிதையென்று பறக்கும் பறவை, உங்களுக்கு தன் ஞாபகமாய் ஒரு சிறகைக் கூட தந்துவிடக்கூடும்.

ஒரு கவிதை, வாசிக்கும் எல்லோருக்கும் ஒரேவிதமான வாசிப்பைத் தரவேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. பறவையின் பறத்தலுக்கு அதன் இறக்கைகள் மட்டும் காரணமாய் அமைவதில்லை. அது பறந்துகொண்டிருக்கும் வெளியில் வீசும் காற்றோ, பொழியும் மழையோ கூட பறத்தலைத் தீர்மானிக்கக் கூடும். அதுபோலவே, ஒரு கவிதையை வாசிக்கும்போது நாம் இருக்கும் சூழல், நமக்கு அந்தப்பொழுதில் வாய்க்கின்ற மனோநிலை என்பவை நம் வாசிப்பைப் பாதிக்கக்கூடும். எனவேதான் ஒரு சமயம் எமக்குப் பிடிக்காத அல்லது தவறவிட்ட கவிதை பின்னொருமுறை வாசிக்கும்போது மிகப்பிடித்தமாகிப் போய்விடுகின்றது. இதை எப்படி இவ்வளவு காலமும் தவறவிட்டிருந்தோம் என மனது வியந்து பார்க்கிறது.

...........
.......................
ஊர்வசியினதும் ஒளவையினதும் கீதாவினதும் கவிதைகளை வாசிக்கும்போது உறவுகள் என்பது ஒருபோதுமே மகிழ்ச்சியையோ இதத்தையோ தரமாட்டாதோ என யோசிக்க வைத்தது. இது அவர்களின் கவிதைகள் என்றில்லாது பொதுவாய் ஆண்/பெண் கவிஞர்கள் எழுதும் அநேக கவிதைகளை முன்வைத்தும் இதைக் கேட்கலாம். மிகுந்த உற்சாகந்தரும் நேசம் பிறகேன் சலித்துப் போகின்றது?அல்லது உறவுகள் குறித்து நாங்கள் நிறையக் கனவுகளை யதார்த்ததிற்கு பொருந்தாது கண்டுகொண்டிருகின்றோமா? அல்லது பிரிவையும் துயரத்தையும் எழுதினால்தான் அவை கவிதைகளாகும் என்று ஒருவகையான கற்பிதங்களுக்குள் சிக்கியிருக்கின்றோமா? என எல்லோரும் சேர்ந்து யோசித்துப் பார்த்தால் நல்லது. 

காதலை எழுதுவதென்றால் கூட நம்மோடு இருந்து பிரிந்துவிட்டுப் போன காதலையோ அல்லது நமக்கு நிகழச் சாத்தியமற்ற நேசத்தைத்தானே ஏதோ ஒரு துயர் தொக்குநிற்க எழுத விழைகிறோம். நம்மை சிலிர்க்க வைக்கும் அல்லது நமக்கான பொழுதுகளுக்கு வர்ணங்களை வாரியிறைத்துக்கொண்டிருக்கும் இதமான காதலை ஏன் நாம் அவ்வளவு எழுதுவதில்லை அல்லது ஏன் எழுதத் தயங்குகின்றோம் என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பிப் பார்க்கலாம்.

(உரையிலிருந்து சில பகுதிகள்)


Wednesday, May 6, 2015

When bots collude

http://www.newyorker.com/business/currency/when-bots-collude?imm_mid=0d16f4&cmp=em-data-na-na-newsltr_20150506


When the U.S. Department of Justice accused online poster retailer David Tompkins of price-fixing, you may have wondered why the DoJ pursued a small-time retailer for its first-such antitrust case against. As it turns out, an algorithm may have been the cause. Algorithm-driven (or bot-driven) selling poses a new and formidable challenge to existing antitrust laws and bot-driven price-fixing could face new scrutiny soon.

Friday, April 24, 2015

Bank Jokes: Stock Markets, MBA principles: Philosophy and Money

During a robbery in Guangzhou, China, the bank robber shouted to everyone in the bank: "Don't move. The money belongs to the State. Your life belongs to you."
Everyone in the bank laid down quietly. This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking.

When a lady lay on the table provocatively, the robber shouted at her: "Please be civilized! This is a robbery and not a rape!"
This is called "Being Professional” Focus only on what you are trained to do!

When the bank robbers returned home, the younger robber (MBA-trained) told the older robber (who has only completed Year 6 in primary school): "Big brother, let's count how much we got."
The older robber rebutted and said: "You are very silly. There is so much money it will take us a long time to count. Tonight, the TVnews will tell us how much we robbed from the bank!"
This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications!

After the robbers had left, the bank manager told the bank supervisor to call the police quickly. But the supervisor said to him: "Wait! Let us take out $10 million from the bank for ourselves and add it to the $70 million that we have previously embezzled from the bank”.
This is called "Swim with the tide.” Converting an unfavorable situation to your advantage!
The supervisor says: "It will be good if there is a robbery every month."
This is called "Killing Boredom.” Personal Happiness is more important than your job.

The next day, the TV news reported that $100 million was taken from the bank. The robbers counted and counted and counted, but they could only count $20 million. The robbers were very angry and complained: "We risked our lives and only took $20 million. The bank manager took $80 million with a snap of his fingers. It looks like it is better to be educated than to be a thief!"
This is called knowledge."Knowledge is worth as much as gold!"

The bank manager was smiling and happy because his losses in the share market are now covered by this robbery.
This is called "Seizing the opportunity.” Daring to take risks!
So who are the real robbers here?

Sundara Ramasamy critics Jeyaganthan: did A Marx review Writer Jeyagandhan?


'ஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய வறடுகள்' என்ற பதிவை முகநூலில் அ.மார்க்ஸ் எழுதியுள்ளார். பஞ்சமே இல்லாமல் தமிழ் சூழலில் மலிந்திருக்கும் இலக்கிய வரடுகளின் சீரிய பிரதிநிதியாக அ. மார்க்சை கருதலாம். அவருடைய இந்தக் குறிப்பு அந்த பிம்பத்தை நீக்கும் முயற்சியாக இருக்கலாம். ஒரு இலக்கியப் பிரதியையோ ஒரு படைப்பாளியையோ இலக்கிய நுண் உணர்வுடன் அணுகி ஒரு வரியேனும் எழுதுவது அவருக்கு சாத்தியமே இல்லை எனும்போது இத்தகைய எதிர்வுகளை கட்டமைத்து, அவற்றுடன் அட்டைக்கத்தி சமர் செய்து, இலக்கியச் சோலையாக தன் பிம்பத்தைக் கட்டமைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அ. மார்க்ஸ் எழுத்தைப் படிப்பவர்களுக்கு தன் முன்னால் பல எதிரிகளை நிறுத்தி தொடை தட்டாமல் அவரால் எழுத முடியாது என்பது தெரிந்திருக்கும். எனவே அவர் இக்குறிப்பின் தொடக்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

"பிரச்சாரநெடி வீசும் எழுத்துக்கள் என வாழ்ந்த காலத்தில் அவரைப்( ஜெயகாந்தனை ) பேசுவதற்கே தகுதியற்றவராக ஒதுக்கிய சுந்தர ராமசாமி, க,நா.சு ஆகியோரை..." 

சுந்தர ராமசாமி ஜெயகாந்தனை பேசுவதற்கே தகுதி அற்றவராகக் கருதினார் என்பது கலப்படமற்ற பொய். இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம் : 1985இல் சுரா எழுதிய முக்கியமான கட்டுரை
' கலைகள் கதைகள் சிறுகதைகள்'. அக்காலகட்டம் வரையிலான அவரது சிறுகதைகள் பற்றிய முழுமையான மதிப்பீடு அது. அதில் ஜெயகாந்தன் பற்றிய பகுதி முழுமையாக : 

“சுதந்திரத்திற்குப் பின் தோன்றிய எழுத்தாளர்களில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதைச் சரித்திரத்தில் வாசக சமுத்திரத்தை நீச்சல் அடித்துத் தாண்டுவதில் வெற்றிகண்டவர்கள் இருவர். ஒருவர் கல்கி, மற்றொருவர் ஜெயகாந்தன். இருவரும் வெவ்வேறான ஜனரஞ்சகத் தன்மை கொண்டவர்கள். வாசகர் எதிர்பார்ப்பில் கல்கி தன்னைக் கரைத்துக்கொண்டபோது, ஜெயகாந்தன் தன்னில் வாசக எதிர்பார்ப்பைக் கரைத்துக்கொள்கிறார். ஊஞ்சலில் அமர்ந்து வாசனைப் பாக்குத் தூள் போட்டுக்கொண்டிருந்த சிறுகதையைத் தெருவில் இறக்கினார் புதுமைப்பித்தன். ஜெயகாந்தன் அதை வாழ்வின் அடிமட்டம்வரை விரட்டினார். ஜெயகாந்தனின் கதைகள் முன் முடிவுகள் கொண்டவை. எனினும் அனுபவச் செழுமையும் வர்ணங்களும் கற்பனை ஆற்றலும் மனித இயல்புகளை ஒரு எல்லை வரையிலும் அனுசரித்துச் செல்வதும் கதைகளாக இவரது எழுத்துகள் வெற்றி பெறக் காரணங்களாக அமைகின்றன. கதை மரபைச் சார்ந்த இவரிடம் தொனி, சிக்கனம், சிறுகதைக்குரிய தனித் தன்மைகள் எவையும் இல்லை. எழுத்துப் பாங்கின் கூறுகளைவிட, மேடையில் குரலெடுத்துத் தம் கதைகளைக் கூறும் தன்மையையே இவரது கதைகள் கொண்டிருக்கின்றன.”

இதே கட்டுரையில் 'தூய இலக்கியவாதியான' கநாசுவை சுந்தர ராமசாமி எப்படி மதிப்பிட்டார் என்பதையும் பார்க்கலாம்.

"க.நா.சு. வின் சிறுகதைகள் கலை வெற்றி கூடாமல் அறிவுப் பூர்வமாக முடிந்துவிடுபவை. பக்குவமும் விவேகமும் கூடி நிற்கும் இக்கதைகளை வெகு சுகமாக நாம் படிக்கிறோம் என்றாலும் இவை நம்மிடம் எவ்விதப் பாதிப்பையோ சலனத்தையோ ஏற்படுத்துவதில்லை. நம் நினைவில் அவை தங்கி நிற்பதுமில்லை".

நாவலும் யதார்த்தமும் என்ற உரையில் ( 1999) ஜெயகாந்தன் பற்றிய பகுதி கீழே : 

"ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் ஹென்றி என்ற கதாபாத்திரம் சமூகத்துக்கு வெளியே நிற்கிறான். நம்மை ஒத்த பழக்கவழக்கங்களைக் கொள்ளாதவனை அந்நியன் என்று நாம் சொல்கிறோம். அவனைப் புறக்கணிக்கிறோம். அவன்மீது ஒரு முத்திரையைக் குத்துகிறோம். சமூகத்துக்கு அவன் ஆகாதவன் என்கிறோம். தொடர்ந்து அந்த நாவலுக்குள் பயணம் செய்கிறபோது ஹென்றியும் நம்மைப் போன்ற மனித உணர்ச்சி கொண்டவன்தான் என்ற உண்மை வெளியாகிறது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மைவிட அதிக மனிதத்தன்மை கொண்டவன் என்பது வெளிப்படுகிறது."

இன்னும் முழுமையாகத் தேடினால் 25 குறிப்புகள் கிடைக்கும்.( நண்பர்கள் அவற்றை இங்கே பதியலாம் ). சுராவின் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவி தொலைக்காட்சியில் அவர் நேர்காணலில் ஜெயகாந்தனை பெருமைப்படுத்தி பேசினார். ஞான பீட பரிந்துரை படிவத்தில் அசோகமித்திரனையும் ஜெயகாந்தனையும் மாறிமாறி பரிந்துரைப்பதாக அவரே ஓரிடத்தில் பதிவு செய்த நினைவு. தனது கடைசி நாவலான 'குழந்தைகள் பெண்கள் ஆண்களை' வெளியிட ஜெயகாந்தனைத்தான் தேர்வு செய்தார்.

ஜெயகாந்தன் வாழ்ந்த காலத்தில் ஒரு இலக்கிய விமர்சகராக அ. மார்க்ஸ் குறைந்தது 30 ஆண்டுகள் செயல்பட்டார். அவர் கட்டுரையுடன் ‘ராஜநாராயணியம்’ தொகுப்பு வெளிவந்தது 1984இல். இந்த 30 ஆண்டுகளில் ஜெயகாந்தனை பற்றி அவர் என்ன மதிப்பீட்டை முன் வைத்தார் ? அவர் கூற்றுப்படி முதல் கட்டுரை இனிதான் வரப்போகிறது. அவர்கூற்றுப்படி இதுவரை எழுதியது ஜெயகாந்தனை பற்றிய ஒரு கண்டனம் மட்டும்தான். அ. மார்க்ஸ் குறிப்பிலிருந்து :

"ஒருபால் புணர்ச்சி குறித்தெல்லாம் அவரிடம் எத்தனை சநாதனக் கருத்துகள் இருந்தன என்பது குறித்து நான் அவரைக் கண்டித்துள்ளது சிலருக்கு நினைவிருக்கலாம் ('கலாச்சாரத்தின்வன்முறை'). அவரது எழுத்துகள் குறித்த எனது விரிவான மதிப்பீடு இம் மாத இதழ் ஒன்றில்வெளி வரும்."

ஜெயகாந்தன் இறந்த பின்னர் ஆயிரம் பொன் என்பதை உணரும் பின் புத்தி கொண்டவராக அ. மார்க்ஸ் இருக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமையுண்டு. ஆனால் 50 ஆண்டுகாலம் ஜெயகாந்தனுடன் நட்பும், உறவும், மதிப்பீடும் கொண்டிருந்த சுரா வை பொய்சொல்லி பழிப்பது கண்டனத்திற்குரியது.( புகைப்படம் : குழந்தைகள் பெண்கள் ஆண்கள் வெளியீடு, 1998)

Monday, April 13, 2015

Icarus Prakash on Internet, Fast Access, Bandwidth consumption


Net Neutrality, Airtel Zero Rating & FlipKart’s சொசொசூ

இந்த NetNeutrality, ஏர்டெல்லின் zero rating , flipkart தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றது. தங்கள் அறிவுக்கெட்டிய வரை, பலரும் இதிலே இந்த விவகாரங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகின்றனர்.

.

இவற்றை வாசிக்கையில், இதிலே தொடர்புடைய அத்தனை பேர் பக்கமும் ஏதோ ஒரு நியாயம் இருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் இருக்கிறது இல்லையா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை அப்பறம் பார்க்கலாம்.

.

முதலில் முக்கியமான நான்கு தரப்பினரும் தங்கள் வாதங்களாக எதை முன்வைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

.

Airtel : நிலமை முன்பு போல இல்லை. நிறைய முதல் போட்டு அனுமதி வாங்கி வியாபாரம் செய்கிறோம். சின்னப் பசங்க புதுசு புதுசாக தொடர்புச் செயலிகளைக் ( Web / Mobile apps) சல்லிசாக இணையத்தில் இறக்கி எங்கள் voice calling தொழிலிலே கை வைக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு இணையச் சேவையை ( selling of data packets) சில்லறை விற்பனை செய்து கட்டுப்படியாகவில்லை. ஆகவே பெரிய நிறுவனங்களுக்கு ( Flipkart) மொத்த விற்பனை செய்து கொஞ்சம் லாபம் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், இந்தத் திட்டத்தினால், சேவைத் தரத்தில். சில்லறை வாடிக்கையாளருக்கும், மொத்த வாடிக்கையாளருக்கும் எந்த வேறுபாடும் இருக்காது என்று உறுதி கூறுகிறோம்.

.

FlipKart: ஏர்டெல், தன் data packet ட்டுகளை இப்படி மொத்த விற்பனை செய்ய சட்டம் அனுமதிக்கிறது என்றால், அதை எங்கள் தொழிலுக்காக நாங்கள் வாங்குவது மட்டும் எப்படித் தவறாகும்? . இந்த திட்டத்தை நாங்கள், எங்கள் விற்பனையை அதிகரிக்கும் ஒரு தள்ளுபடிகூப்பன் போலத்தான் பயன்படுத்தப் போகிறோம். சரவணா ஸ்டோர்சில் வண்டியை காசு குடுத்து பார்க்கிங் செய்து விட்டு, உள்ளே கடையில் பொருள் வாங்கியதற்கான ரசீதைக் காட்டி பார்க்கிங் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அது போல இணையத்தில் எங்கள் கடைக்கு வந்தால் / வந்து பொருளை வாங்கினால், அதற்குச் செலவான data packet க்கான காசை, வாடிக்கையாளர் ஏர்டெல்லுக்குத் தரத்தேவை இல்லை. ஏர்டெல்லிடம் நாங்கள் கொடுத்துவிடுவோம். இது எங்கள் இணைய அங்காடிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கான ஒரு ஊக்கத் தொகை.

.

NetNeutrality ஆதரவு / Airtel Zero Rating எதிர்ப்பு : இணையம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு சுங்கச் சாலையைப் பயன்படுத்த, அதற்கான நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைக் கேட்பது நியாயம். வேண்டுமானால், இருசக்கர வாகனத்துக்கு ஒரு கட்டணம், நான்கு சக்கர வாகனத்துக்கு ஒரு கட்டணம் அல்லது நெரிசல் நேரத்தில் கூடுதல் கட்டணம் இப்படி கட்டண விகிதத்தில் பலவிதமான படிநிலைகள் இருக்கலாம். ஆனால், அந்தக் கட்டண விகிதம், பயணம் செய்பவரின் இலக்கையும், நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க் கூடாது. zero rating என்பது பயனர்களை, அவர்களுடைய நோக்கம், இலக்கு அடிப்படையில் தரம் பிரித்து விடுகிறது ( flipkart உள்ளே போகிறவனுக்கு இணையம் இலவசம், Amazon உள்ளே போகிறவனுக்கு இணையக் கட்டணம் உண்டு என்கிற தரம் பிரிப்பு). இப்படி, பயனர்களை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தரம் பிரிப்பது NetNeutrality என்கிற தத்துவத்துக்கு நேர் எதிரான விஷயம்.

.

NetNeutrality ஆதரவு / Airtel Zero Rating ஆதரவு : நான் NetNeutrality பக்கம் தான். ஆனால், இதற்கும் Airtel Zero Rating க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த ஏர்டெல் திட்டத்தினால், பயனர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஒரு சாராருக்கு மட்டும் சேவையை இலவசமாகக் கொடுத்தால் தான் தப்பு. ஆனால், இது இலவசமாகத் தரப்படவில்லை. அதற்கான காசை FlipKart இடம் இருந்து ஏர்டெல் வசூலித்துக் கொள்கிறது. இது விற்பனை உத்தி மட்டுமே.

.

மேற் சொன்ன விஷயங்கள் அனைத்தும் கொஞ்சம் அதீதமாக எளிமைப்படுத்தப் பட்டிருந்தாலும், அதன் சாராம்சத்தைப் பார்த்தால், இந்த நால்வர் பக்கமும் நியாயம் இருக்கிறது என்று தோன்றுகிறது அல்லவா?

.

ஏனெனில், ஏர்டெல் போன்ற சேவை நிறுவனங்கள், இணையத்தை இப்படி மொத்தமாக துண்டு போட்டு பெரிய நிறுவனங்களுக்கு விற்கலாமா கூடாதா என்பதற்கான அறிவுறுத்தலோ, வழிமுறையோ தற்சமயம் தொலைத் தொடர்புக் கொள்கையில் தெளிவாக இல்லை.

.

உதாரணமாக வருமான வரிச் சட்டம் தெளிவான விதிமுறைகளுடன் இன்று அமுலில் உள்ளது. அதனால், கேள்வி கேட்காமல் வரி கட்டுகிறோம். ஆனால், அப்படி ஒன்று இது நாள் வரை இல்லாமல் இருந்து, அரசு திடீரென்று வருமான வரியை அறிமுகப் படுத்த நினைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.. அப்போது எப்படிப் பட்ட கூச்சல் குழப்பம் நிலவும். நினைத்துப் பாருங்கள்… எல்லாரும் அவரவர்களுக்கான நியாயத்தைப் பேசுவார்கள். “என் உழைப்பு, என் சம்பாத்தியம், உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?” என்ற அடாவடிக் கேள்வி கூட நியாயம் போலத் தோன்றும். அரசு தரப்பில் தெளிவான கொள்கை முடிவுகள், விதிமுறைகள் வரும் வரை, இந்த குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

.

NetNeutrality இலும் இந்தக் குழப்பமான நிலமைதான் நீடிக்கிறது. அனைத்துத் தரப்பினரும், தங்களுடைய கொள்கை, வர்த்தகம், அரசியல், பிறலாபங்கள் ஆகியவற்றுக்கு எந்த நிலைப்பாடு சாதகமாக இருக்கிறதோ அதைத்தான் எடுப்பார்கள். நாளை அரசு, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன், பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இது போல மொத்தமாக விற்கலாம் அல்லது கூடாது என்று முடிவெடுக்கலாம். அதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டி வரும்.

.

********

.

ஆனால், flipkart க்கு இது தேவை இல்லாத வேலை. மகா மொக்கையான மார்க்கெட்டிங் ஐடியா…கிட்டதட்ட சொந்தச் செலவுல சூனியம் போன்ற விஷயம். இணையத்தில் எல்லாரும் காறித்துப்புகிறார்கள் என்பதற்காக மட்டும் இதை நான் சொல்லவில்லை.

.

ஒரு கடைக்கு உள்ளே வந்து பொருள் வாங்கினால், அதற்குத் தள்ளுபடிச் சலுகை தரலாம். ஆனால், கடைக்கு உள்ளே வருவதற்கே இலவசமாக எதையும் தரக்கூடாது. இது சட்டத்துக்குப் புறம்பானது. உதாரணமாக, ஒரு அங்காடியிலே நான்கு பேர் வெங்காயம் விற்கிறார்கள். அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப கிலோ 20–25 ரூபா வரை வைத்து விற்கிறார்கள். அதிலே, ஒருவன் மட்டும், கிலோ அஞ்சு ரூபாய்க்கு விற்க முடியுமா? முடியாது. “ஏன் அவன் இஷ்டம், எந்த விலைக்கு விற்றால் உனக்கென்ன” என்று நாம் தர்க்கம் பேசலாம். ஆனால், Indian Competition Law என்கிற சட்டமானது, ஐந்து ரூபாய்க்கு வெங்காயத்தை விற்பது predatory pricing என்று சொல்லி, விதிமுறையைக் காட்டி, சந்தை நிலவரத்தில் குழப்பம் ஏற்படுத்திய ஆளை தண்டித்து வெளியே அனுப்பி, முதல் மூவருக்குச் பாதுகாப்பாக நிற்கும்.

.

விற்பனை உத்தியானது, அனைவருக்கும் பொதுவான தளத்திலே, அவரவர் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தான் இருக்கவேண்டுமே தவிர, போட்டியாளர்களை வியாபாரத்தில் இருந்து வெளியே தள்ளி ( exclusion of rivals) ஏகபோக விற்பனையாளர் (monopoly) ஆவதற்கான முயற்சி ஆக இருக்கக் கூடாது.

.

இவர் இலவசமாக இணையத்தை வழங்குவது, எங்கள் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்று போட்டியாளர்கள் யாராவது unfair trade practices என்ற காரணத்துக்காக Competition Commission of India என்கிற அரசு அமைப்பிடம் வழக்குத் தொடுத்தால், நீதிபதிகள்,. ஃபிளிப்கார்ட்டை சுளுக்கெடுத்துவிடுவார்கள்.

.

அந்த நாள் வரும் smile emoticon

Like · Comment · 
  • Chandrasekaran Krishnan சார். ஸீரோ ரேட்டிங் இன்னிக்குப் பார்க்க சாதுவா இருக்கலாம். இன்னும் கொஞ்சம் வர்ஷம் கழிச்சு அது நாட்டாமை ஆயிடும். ஏர்டல் என்னோட பைப்ப உபயோகிக்க நீ வரலாம் நீ வரக்கூடாதுன்னு சட்டம் போடுவான். அவனோட சேவைக்கு போட்டியா யார் யாரெல்லாம் இயங்க முடியுமோ அவங்க எல்ல...See More
    16 hrs · Like · 1
  • Chandrasekaran Krishnan அதோட, இன்னிக்கு ஏர்டெல் வாழ்கன்னு பச்சைக்கொடி காட்டும் ஃப்ளிப்கார்ட், நாளைக்கு ஏர்டெல் ரீடைல்க்கு வந்தால் என்னாகும்னு நினைச்சுப் பாருங்க. ஏர்டெலோட யார் யாரெல்லாம் பார்தட்னரா இருக்காங்களோ அவங்க சரக்கு மட்டும் எளிதா எல்லோருக்கும் போகும். காம்படீடர் எல்லோரும் ரிலையன்ஸ் கால்லயோ வோடாஃபோன் கால்லயோ விழனும். யார் கண்டா, பி எஸ் என் எல் மாதிரி யாரவது காக்கும் கரமாக ரிஸரக்ட் ஆகக்கூட இது வழி வகுக்கலாம்.
    16 hrs · Like · 1
  • Venkat Subramani Also - what guaranee is there, that, Airtle will not provide higher speed for a user using flipkart, than another user, brosing to other sites - net neutrality really will be questioned here...
    15 hrs · Like · 1
  • Srikanth Meenakshi பிரகாஷ், நல்ல சாராம்சக் கட்டுரை. குறிப்பாக நான்கு நிலைகளையும் சமமாக (balanced) எழுதியதற்குப் பாராட்டுகள். இந்த விஷயத்தில் ஃப்ளிப்கார்ட் செய்த தவறு கொஞ்சம் முந்திரிக்கொட்டைத் தனமாக முன்னால் சென்று பங்கேற்றது. இதில் first-mover advantage எல்லாம் ஒன்றும் ...See More
    8 hrs · Like · 1
  • Jaya Prakash Srikanth Meenakshi : உண்மை. FlipKart க்கு இது வேண்டாத வேலை. இந்த மாதிரி சர்ச்சைக்குள் எல்லாம் மாட்டிக் கொள்ளவே கூடாது. 

    மார்க்கெட்டிங் கோணத்தில் கூட, இது பெரிய புரட்சி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு வர்த்தகப் பரிமாற்றத்தில், வாடிக்கையாளருக்கு ஒரு 
    ...See More
    6 hrs · Like · 1
  • Srikanth Meenakshi Prakash, I look at it a bit differently. Today, among smart phone users, there are various kinds. Principle among them are people who use data without any care about charges, people who don't use data at all (don't have data plan even), and people who ...See More
    5 hrs · Like
  • Jaya Prakash But Srikanth Meenakshi, FK is not a content driven site ....like a youtube channel or khan academy. Flipkart's bottom line is selling. For all its technology hype and hoopla, its JUST a shop and you go there to buy something

    Apps in Education, Informa
    ...See More
    4 hrs · Like
  • Srikanth Meenakshi Prakash, my thought is that exactly for the reason that it is a commerce site and not a content driven site, that FK should offer the access for free (and build it into the price of products it sells). It just makes business sense. Extending your analo...See More
    4 hrs · Like
  • Badri Seshadri Jaya Prakash: I disagree. I think it will benefit Flipkart enormously. Whether it is good for the Internet itself is the current debate, not whether it will be beneficial to Flipkart.

    Aircel offers Facebook & Whatsapp on a cost free model. No one made
    ...See More
    4 hrs · Like · 1
  • Srikanth Meenakshi //They have very little money available for fancy data packs. Airtel Zero neatly fits in there. //

    Bingo.
    4 hrs · Like
  • Srikanth Lakshmanan Badri Seshadri Cost free model and Airtel Zero are not one and same. Aircel uses FB / Whatsapp as sampling to make people that data is worth. AZ on other hand is launching business platform. Sachin bansal himself says that B2B pricing in long term is n...See More
    4 hrs · Edited · Like
  • Badri Seshadri Srikanth Lakshmanan: I am aware that mobile data pricing is a rip off. I use mobile data very selectively (Vodafone - flat 1 GB plan @ Rs. 250/- a month. Speed drops to 64kbps after I exhaust the full data transfer. But I rarely hit even 50% of this li...See More
    4 hrs · Like
  • Srikanth Meenakshi //I think, things like AZ will fail on its own, soon enough. There is no critical mass for something like this to work even in the short term.//

    Badri, I don't see how you can say this at this time. The only situation that I see AZ failing is if the p
    ...See More
    3 hrs · Edited · Like
  • Badri Seshadri Srikanth Meenakshi: I am of the opinion that Flipkart will be successful, but very few others will be. So this will simply become a Flipkart+Airtel game and that will make it boring. Flipkart with deep pockets and actual direct benefit to their topline...See More
    3 hrs · Like
  • Srikanth Meenakshi Badri, I think you are underestimating the bandwagon effect. SnapDeal and Amazon will definitely join in if not immediately, at least once the TRAI ruling comes through. If one bank joins in others will. If one online investment services company joins in, others will. 
    2 hrs · Like
  • Badri Seshadri Srikanth Meenakshi: I doubt if any of the banks will join in. They do not get any benefit. (At least that is what I can see.) Ecom, it makes sense. Investment services... you are expecting too much:-) Anyone who is into serious investments will have access to decent Internet connectivity deal (or can get one) and will care the least about AZ.
    2 hrs · Like
  • Srikanth Meenakshi Badri, you're probably right...we'll see 
    1 hr · Like