Sunday, March 8, 2015

Ki Pi Aravindhan: Christopher Francis Aravinthan Anjali: Eezham Faces and People


இன்று மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன், ஈழப் போராட்டத்திலும் இலக்கியத்திலும் முன்னொரு காலத்தே என்போன்றோருக்கு ஆதர்சமாயிருந்தவர். மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(TLO), ஈரோஸ் போன்றவற்றில் அர்ப்பணிப்புகளோடு உழைத்தவர். சிறையிலும் பசியிலும் கனவுகளிலும் வாழ்ந்தவர்.

புலம்பெயர்ந்த பின்பாக மெல்ல மெல்ல புலிப் பாஸிசத்தின் ஊதுகுழலாக கவிஞர் சீரழிந்துபோனார். புலிகளை நியாயப்படுத்த தன் நெஞ்சறிய அவர் பொய்யுரைக்க ஆரம்பித்தபோது அவரது ஆன்மா மரித்துப் போனது. அதன் பின்னாக அவரால் கவிதைகள் எழுத முடியவில்லை. 

ஒவ்வொரு இழப்பிலும் நமக்குக் கற்றுக்கொள்ள கனக்க இருக்கிறது, முன்னோடிக்கு தலைசாய்த்து அஞ்சலிகள்.

Like ·  · 



"அறுபதுகளின் இறுதிப்பகுதியில் முகிழ்ந்த ஒரு தலைமுறையின் எழுச்சியுடன் என் கனவுகளும் பின்னிப் பிணைந்திருந்தன. அத்தலைமுறை எழுச்சிக்கு சிறிலங்கா அரசின் தரப்படுத்தல் என்னும் கல்விக் கொள்கைதான் காரணமென்பது ஒற்றைப் பரிமாண நோக்கமாகும். அவ்வெழுச்சியானது அரசமைப்பு, அவ்வரசமைப்பின் உட்சாரமான இனவாதம் ஆகிய புறநிலைத்தாக்கங்களில் மட்டுமல்லாது, சமூக அமைப்பின் உள்நிலை முரண்களினதும் அழுத்தங்களினதும் வெளிப்பாடுமாகும். பல ஊற்றுக்கண்களின் கசிவுகளில் இருந்தும், சொட்டுச் சொட்டாய்த் தேங்கிய அவமானங்களின் ஆழமனப்படிவுகளிலிருந்தும், மடை உடைத்த வெள்ளந்தான் அந்தத் தலைமுறை எழுச்சி. அதன் பன்முகப் பரிமாணம் ஆய்வாளர் பலராலும் புரிந்து கொள்ளப்படவில்லை. அதனால்தான் அந்த எழுச்சியின் உச்சநிலைப்புள்ளி எதுவரையானது என்பதை யாராலும் இதுவரை கணித்துக்கூற இயலவில்லை.
...........
தேசம் ஒன்றைத் துறந்து விடுதல் என்பது அத்துணை எளிமையானதொன்றல்ல. இது எனக்கு மட்டுமேயான தனித்த பிரச்சனையுமல்லத்தான். வரலாறு முழுவதும் ஊர் துறத்தல் மனித சமூகத்தின் விதியாகச் செயற்பட்டு வந்தபோதும் எல்லாச் சமூகமும் இவ்வியல்பு விதையைச் சொல்லொண்ணா வலியாகவே கருதி வந்துள்ளது. தமிழ்ச் சமூகமும் ஊர் துறந்து, உலகெங்கும் கொத்துக் கொத்தாய்ச் சிதறி வலிகளுடன் வாழ்வது இன்று நேற்றல்ல. தமிழ்ச் சமூகத்தின் ஒரு தொகுதியான இலங்கைத் தீவின் சமுகத்திற்குள்ளதும் அந்த வலிதான். அந்த வலிகளே இன்று அச்சமூகத்தின் வலிமையாக மாற்றம் பெறுகின்றது என்பது மறு விளைவு. இந்த நூற்றாண்டின் பின் கால்நூற்றாண்டுப் பகுதியில்தான் எங்களின் ஊர் துறத்தல் வேகம் பெற்றது. ஒரு தேசம், இன்னும் சொல்லப்போனால் ஒரு ஊர் என்பது வெறுமே கல்லாய், மண்ணாய், மரஞ்செடி தோப்பாய் ஊமையாய் நிற்குமாப்போல் இருந்தாலும், மனிதரை வாழ்விக்கும் உயிர் அணுக்கள் அவைதான். ஆதலால் ஒரு ஊர் என்பதை நம் வாழ்வின் தொன்மம் என்றே கருதுகிறேன். அத்தொன்மத்தொடரை யாராலும் அறுத்துவிட முடியாது. அந்த ஊரென்னும் குறுஞ்சுழல் படிவுகளிலேயே ஒவ்வொரு மனிதரும் வார்க்கப்படுகின்றனர். அங்கிருந்தே அவர் தம் உலகமும் வளர்கின்றது. அந்த ஊருக்கு அந்நியமாகாமல் அதன் நேசத்திற்குரிய மகனாக இருந்தல் எல்லோருக்கும் வாய்த்ததொன்றல்ல. எந்த மனிதரும் இறுதி நாட்களில் தம் ஆணிவேர் தொட்டு நிற்கும் அந்த ஊரினைச் சென்றடையவே விரும்புகின்றனர். இது எனக்கு வாய்க்குமா நான் அறியேன். இந்த தவிப்புடனேயே நான் அலைந்து கொண்டிருக்கின்றேன். பலரையும் எழுதத்தூண்டிய இந்தத் தவிப்பே என்னையும் எழுதத் தூண்டுகின்றது...."

(கி.பி.அரவிந்தன் தன் 'கனவின் மீதி...' என்ற மூன்றாவது கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து சில பகுதிகள். இந்நூல் 1999 வெளியாகியது)
(நன்றி: ஓவியம்- ட்ராஸ்கி மருது)

'"அறுபதுகளின் இறுதிப்பகுதியில் முகிழ்ந்த ஒரு தலைமுறையின் எழுச்சியுடன் என் கனவுகளும் பின்னிப் பிணைந்திருந்தன. அத்தலைமுறை எழுச்சிக்கு சிறிலங்கா அரசின் தரப்படுத்தல் என்னும் கல்விக் கொள்கைதான் காரணமென்பது ஒற்றைப் பரிமாண நோக்கமாகும். அவ்வெழுச்சியானது அரசமைப்பு, அவ்வரசமைப்பின் உட்சாரமான இனவாதம் ஆகிய புறநிலைத்தாக்கங்களில் மட்டுமல்லாது, சமூக அமைப்பின் உள்நிலை முரண்களினதும் அழுத்தங்களினதும் வெளிப்பாடுமாகும். பல ஊற்றுக்கண்களின் கசிவுகளில் இருந்தும், சொட்டுச் சொட்டாய்த் தேங்கிய அவமானங்களின் ஆழமனப்படிவுகளிலிருந்தும், மடை உடைத்த வெள்ளந்தான் அந்தத் தலைமுறை எழுச்சி. அதன் பன்முகப் பரிமாணம் ஆய்வாளர் பலராலும் புரிந்து கொள்ளப்படவில்லை. அதனால்தான் அந்த எழுச்சியின் உச்சநிலைப்புள்ளி எதுவரையானது என்பதை யாராலும் இதுவரை கணித்துக்கூற இயலவில்லை.
...........
தேசம் ஒன்றைத் துறந்து விடுதல் என்பது அத்துணை எளிமையானதொன்றல்ல. இது எனக்கு மட்டுமேயான தனித்த பிரச்சனையுமல்லத்தான். வரலாறு முழுவதும் ஊர் துறத்தல் மனித சமூகத்தின் விதியாகச் செயற்பட்டு வந்தபோதும் எல்லாச் சமூகமும் இவ்வியல்பு விதையைச் சொல்லொண்ணா வலியாகவே கருதி வந்துள்ளது. தமிழ்ச் சமூகமும் ஊர் துறந்து, உலகெங்கும் கொத்துக் கொத்தாய்ச் சிதறி வலிகளுடன் வாழ்வது இன்று நேற்றல்ல. தமிழ்ச் சமூகத்தின் ஒரு தொகுதியான இலங்கைத் தீவின் சமுகத்திற்குள்ளதும் அந்த வலிதான். அந்த வலிகளே இன்று அச்சமூகத்தின் வலிமையாக மாற்றம் பெறுகின்றது என்பது மறு விளைவு. இந்த நூற்றாண்டின் பின் கால்நூற்றாண்டுப் பகுதியில்தான் எங்களின் ஊர் துறத்தல் வேகம் பெற்றது. ஒரு தேசம், இன்னும் சொல்லப்போனால் ஒரு ஊர் என்பது வெறுமே கல்லாய், மண்ணாய், மரஞ்செடி தோப்பாய் ஊமையாய் நிற்குமாப்போல் இருந்தாலும், மனிதரை வாழ்விக்கும் உயிர் அணுக்கள் அவைதான். ஆதலால் ஒரு ஊர் என்பதை நம்  வாழ்வின் தொன்மம் என்றே கருதுகிறேன். அத்தொன்மத்தொடரை யாராலும் அறுத்துவிட முடியாது. அந்த ஊரென்னும் குறுஞ்சுழல் படிவுகளிலேயே ஒவ்வொரு மனிதரும் வார்க்கப்படுகின்றனர். அங்கிருந்தே அவர் தம் உலகமும் வளர்கின்றது. அந்த ஊருக்கு அந்நியமாகாமல் அதன் நேசத்திற்குரிய மகனாக இருந்தல் எல்லோருக்கும் வாய்த்ததொன்றல்ல. எந்த மனிதரும் இறுதி நாட்களில் தம் ஆணிவேர் தொட்டு நிற்கும் அந்த ஊரினைச் சென்றடையவே விரும்புகின்றனர். இது எனக்கு வாய்க்குமா நான் அறியேன். இந்த தவிப்புடனேயே நான் அலைந்து கொண்டிருக்கின்றேன். பலரையும் எழுதத்தூண்டிய இந்தத் தவிப்பே என்னையும் எழுதத் தூண்டுகின்றது...."

(கி.பி.அரவிந்தன் தன் 'கனவின் மீதி...' என்ற மூன்றாவது கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து சில பகுதிகள். இந்நூல் 1999 வெளியாகியது)
(நன்றி: ஓவியம்- ட்ராஸ்கி மருது)'






அன்பு அண்ணன் கி.பி. அரவிந்தன் அவர்களுக்கு அஞ்சலிகள். நெருக்கமானவர்களுக்கு அஞ்சலி சொல்லும் ஒவ்வொரு பொழுதுகளிலும் நாமும் மரணித்து உயிர்த்தெழுவதாகவே தோன்றுகிறது. அவரின் ஒத்துழைப்பு இல்லையெனில் எனது யாழ் நூலகம் குறித்த எரியும் நினைவுகள் ஆவணப்படம் அப்போது வெளிவந்திருக்க வாய்ப்பில்லை.அதனை வெளிக் கொண்டு செல்வதில் அவர் விருப்போடு இணைந்து கொண்டார். கடைசியாக அவரோடு நமது போராட்ட வரலாற்றைப் பதிவு செய்வது தொடர்பாகப் பேசியிருந்தேன். விடியோவில் உங்கள் அனுபவங்களையும் போராட்டத்தின் ஆரம்ப காலங்கள் குறித்த அனுபவங்களையும் பதியுமாறு அவரிடம் கேட்டேன். எழுதுவதாகச் சொன்னார். ஈழத்தில் ஆயுதப் போராட்ட ஆரம்ப நாட்களில் முதல் வீர மரணம் அடைந்த போராளி சிவகுமாரன் சயனைற் குப்பி கடித்த போது அந்த களத்தில் இருந்தவர் சுந்தர் என்கிற கிறிஸ்டோபர் பிரான்சிஸ் ஆகிய அரவிந்தன் அண்ணா. நான் அவருடன் பேசத் தொடங்கியது முதலாகவே அவருக்குள் ஒரு அரசியல் குழப்பம் இருந்து வந்ததை உணர்ந்திருக்கிறேன். எப்போதும் வெளிப்படையாகப் பேசத் தயக்கம் அவருக்குள் இருந்தது. சென்னையில் ஈழ புலம்பெயர் குறும்படங்கள் சிலவற்றை அவர் திரையிட்ட ஒரு நாளிலேயே அவரை முதல் முதலில் சந்தித்தேன். பலரது படைப்புகளும் வெளியே வரவேண்டும் என்பதில் தன்னலமில்லா செயற்ப்பாட்டாளர்.

Like ·  · 
  • மறவன்புலவு க. சச்சிதானந்தன் 08.03.2015 நண்பகல்.
    1973 கார்த்திகையில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் பாடசாலையில் முதல் சந்திப்பு. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்காக நான் அமைத்த தொண்டரணியில் சிவகுமாரனும் கிறிசுத்தோபர் பிரான்சிசும் தொண்டர்கள்.
    1974 தை 11 வரை நீண்ட இத்
    தொடர்பு, 1975 தை 10இல், 1976 தை10இல் சுந்தர் என்ற பெயருடன் நினைவுச் சின்னம் அமைக்க, மீளமைக்க வந்த அருமைத் தொண்டர்.
    1981இல் சென்னை எழும்பூரில் தற்செயலான சந்திப்பு. அதற்குப் பின்னர் அவரோடு தொடர்புகள் நீடித்தன, பிரான்சிலிருந்தும் இணையவழித் தொடர்பு.
    2013இல் பாரிசு நகருக்கு நான் சென்றதன் முதல் நோக்கம் கிறிசுத்தோபர் பிரான்சிசு என்ற சுந்தர் என்ற கி பி அரவிந்தனைப் பார்க்க. நோயுற்றார் என்ற செய்தியால் வாட்டமுற்ற நான் அவருக்காகப் பாரிசில் ஒரு நாளை ஒதுக்கினேன்.
    மென்மை மேன்மை இனிமை கொண்ட தொண்டர், போராளி, ஊடகத்தார், எழுத்தாளர், கருத்துருவாக்கி, ஆழ்ந்த தமிழ்த் தேசியவாதி.
    அவர் மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தியால் மலைத்தேன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் புற்றுநோய்க்கு ஆளாகினார்.