Monday, April 13, 2015

Icarus Prakash on Internet, Fast Access, Bandwidth consumption


Net Neutrality, Airtel Zero Rating & FlipKart’s சொசொசூ

இந்த NetNeutrality, ஏர்டெல்லின் zero rating , flipkart தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றது. தங்கள் அறிவுக்கெட்டிய வரை, பலரும் இதிலே இந்த விவகாரங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகின்றனர்.

.

இவற்றை வாசிக்கையில், இதிலே தொடர்புடைய அத்தனை பேர் பக்கமும் ஏதோ ஒரு நியாயம் இருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் இருக்கிறது இல்லையா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை அப்பறம் பார்க்கலாம்.

.

முதலில் முக்கியமான நான்கு தரப்பினரும் தங்கள் வாதங்களாக எதை முன்வைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

.

Airtel : நிலமை முன்பு போல இல்லை. நிறைய முதல் போட்டு அனுமதி வாங்கி வியாபாரம் செய்கிறோம். சின்னப் பசங்க புதுசு புதுசாக தொடர்புச் செயலிகளைக் ( Web / Mobile apps) சல்லிசாக இணையத்தில் இறக்கி எங்கள் voice calling தொழிலிலே கை வைக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு இணையச் சேவையை ( selling of data packets) சில்லறை விற்பனை செய்து கட்டுப்படியாகவில்லை. ஆகவே பெரிய நிறுவனங்களுக்கு ( Flipkart) மொத்த விற்பனை செய்து கொஞ்சம் லாபம் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், இந்தத் திட்டத்தினால், சேவைத் தரத்தில். சில்லறை வாடிக்கையாளருக்கும், மொத்த வாடிக்கையாளருக்கும் எந்த வேறுபாடும் இருக்காது என்று உறுதி கூறுகிறோம்.

.

FlipKart: ஏர்டெல், தன் data packet ட்டுகளை இப்படி மொத்த விற்பனை செய்ய சட்டம் அனுமதிக்கிறது என்றால், அதை எங்கள் தொழிலுக்காக நாங்கள் வாங்குவது மட்டும் எப்படித் தவறாகும்? . இந்த திட்டத்தை நாங்கள், எங்கள் விற்பனையை அதிகரிக்கும் ஒரு தள்ளுபடிகூப்பன் போலத்தான் பயன்படுத்தப் போகிறோம். சரவணா ஸ்டோர்சில் வண்டியை காசு குடுத்து பார்க்கிங் செய்து விட்டு, உள்ளே கடையில் பொருள் வாங்கியதற்கான ரசீதைக் காட்டி பார்க்கிங் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அது போல இணையத்தில் எங்கள் கடைக்கு வந்தால் / வந்து பொருளை வாங்கினால், அதற்குச் செலவான data packet க்கான காசை, வாடிக்கையாளர் ஏர்டெல்லுக்குத் தரத்தேவை இல்லை. ஏர்டெல்லிடம் நாங்கள் கொடுத்துவிடுவோம். இது எங்கள் இணைய அங்காடிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கான ஒரு ஊக்கத் தொகை.

.

NetNeutrality ஆதரவு / Airtel Zero Rating எதிர்ப்பு : இணையம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு சுங்கச் சாலையைப் பயன்படுத்த, அதற்கான நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைக் கேட்பது நியாயம். வேண்டுமானால், இருசக்கர வாகனத்துக்கு ஒரு கட்டணம், நான்கு சக்கர வாகனத்துக்கு ஒரு கட்டணம் அல்லது நெரிசல் நேரத்தில் கூடுதல் கட்டணம் இப்படி கட்டண விகிதத்தில் பலவிதமான படிநிலைகள் இருக்கலாம். ஆனால், அந்தக் கட்டண விகிதம், பயணம் செய்பவரின் இலக்கையும், நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க் கூடாது. zero rating என்பது பயனர்களை, அவர்களுடைய நோக்கம், இலக்கு அடிப்படையில் தரம் பிரித்து விடுகிறது ( flipkart உள்ளே போகிறவனுக்கு இணையம் இலவசம், Amazon உள்ளே போகிறவனுக்கு இணையக் கட்டணம் உண்டு என்கிற தரம் பிரிப்பு). இப்படி, பயனர்களை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தரம் பிரிப்பது NetNeutrality என்கிற தத்துவத்துக்கு நேர் எதிரான விஷயம்.

.

NetNeutrality ஆதரவு / Airtel Zero Rating ஆதரவு : நான் NetNeutrality பக்கம் தான். ஆனால், இதற்கும் Airtel Zero Rating க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த ஏர்டெல் திட்டத்தினால், பயனர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஒரு சாராருக்கு மட்டும் சேவையை இலவசமாகக் கொடுத்தால் தான் தப்பு. ஆனால், இது இலவசமாகத் தரப்படவில்லை. அதற்கான காசை FlipKart இடம் இருந்து ஏர்டெல் வசூலித்துக் கொள்கிறது. இது விற்பனை உத்தி மட்டுமே.

.

மேற் சொன்ன விஷயங்கள் அனைத்தும் கொஞ்சம் அதீதமாக எளிமைப்படுத்தப் பட்டிருந்தாலும், அதன் சாராம்சத்தைப் பார்த்தால், இந்த நால்வர் பக்கமும் நியாயம் இருக்கிறது என்று தோன்றுகிறது அல்லவா?

.

ஏனெனில், ஏர்டெல் போன்ற சேவை நிறுவனங்கள், இணையத்தை இப்படி மொத்தமாக துண்டு போட்டு பெரிய நிறுவனங்களுக்கு விற்கலாமா கூடாதா என்பதற்கான அறிவுறுத்தலோ, வழிமுறையோ தற்சமயம் தொலைத் தொடர்புக் கொள்கையில் தெளிவாக இல்லை.

.

உதாரணமாக வருமான வரிச் சட்டம் தெளிவான விதிமுறைகளுடன் இன்று அமுலில் உள்ளது. அதனால், கேள்வி கேட்காமல் வரி கட்டுகிறோம். ஆனால், அப்படி ஒன்று இது நாள் வரை இல்லாமல் இருந்து, அரசு திடீரென்று வருமான வரியை அறிமுகப் படுத்த நினைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.. அப்போது எப்படிப் பட்ட கூச்சல் குழப்பம் நிலவும். நினைத்துப் பாருங்கள்… எல்லாரும் அவரவர்களுக்கான நியாயத்தைப் பேசுவார்கள். “என் உழைப்பு, என் சம்பாத்தியம், உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?” என்ற அடாவடிக் கேள்வி கூட நியாயம் போலத் தோன்றும். அரசு தரப்பில் தெளிவான கொள்கை முடிவுகள், விதிமுறைகள் வரும் வரை, இந்த குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

.

NetNeutrality இலும் இந்தக் குழப்பமான நிலமைதான் நீடிக்கிறது. அனைத்துத் தரப்பினரும், தங்களுடைய கொள்கை, வர்த்தகம், அரசியல், பிறலாபங்கள் ஆகியவற்றுக்கு எந்த நிலைப்பாடு சாதகமாக இருக்கிறதோ அதைத்தான் எடுப்பார்கள். நாளை அரசு, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன், பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இது போல மொத்தமாக விற்கலாம் அல்லது கூடாது என்று முடிவெடுக்கலாம். அதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டி வரும்.

.

********

.

ஆனால், flipkart க்கு இது தேவை இல்லாத வேலை. மகா மொக்கையான மார்க்கெட்டிங் ஐடியா…கிட்டதட்ட சொந்தச் செலவுல சூனியம் போன்ற விஷயம். இணையத்தில் எல்லாரும் காறித்துப்புகிறார்கள் என்பதற்காக மட்டும் இதை நான் சொல்லவில்லை.

.

ஒரு கடைக்கு உள்ளே வந்து பொருள் வாங்கினால், அதற்குத் தள்ளுபடிச் சலுகை தரலாம். ஆனால், கடைக்கு உள்ளே வருவதற்கே இலவசமாக எதையும் தரக்கூடாது. இது சட்டத்துக்குப் புறம்பானது. உதாரணமாக, ஒரு அங்காடியிலே நான்கு பேர் வெங்காயம் விற்கிறார்கள். அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப கிலோ 20–25 ரூபா வரை வைத்து விற்கிறார்கள். அதிலே, ஒருவன் மட்டும், கிலோ அஞ்சு ரூபாய்க்கு விற்க முடியுமா? முடியாது. “ஏன் அவன் இஷ்டம், எந்த விலைக்கு விற்றால் உனக்கென்ன” என்று நாம் தர்க்கம் பேசலாம். ஆனால், Indian Competition Law என்கிற சட்டமானது, ஐந்து ரூபாய்க்கு வெங்காயத்தை விற்பது predatory pricing என்று சொல்லி, விதிமுறையைக் காட்டி, சந்தை நிலவரத்தில் குழப்பம் ஏற்படுத்திய ஆளை தண்டித்து வெளியே அனுப்பி, முதல் மூவருக்குச் பாதுகாப்பாக நிற்கும்.

.

விற்பனை உத்தியானது, அனைவருக்கும் பொதுவான தளத்திலே, அவரவர் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தான் இருக்கவேண்டுமே தவிர, போட்டியாளர்களை வியாபாரத்தில் இருந்து வெளியே தள்ளி ( exclusion of rivals) ஏகபோக விற்பனையாளர் (monopoly) ஆவதற்கான முயற்சி ஆக இருக்கக் கூடாது.

.

இவர் இலவசமாக இணையத்தை வழங்குவது, எங்கள் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்று போட்டியாளர்கள் யாராவது unfair trade practices என்ற காரணத்துக்காக Competition Commission of India என்கிற அரசு அமைப்பிடம் வழக்குத் தொடுத்தால், நீதிபதிகள்,. ஃபிளிப்கார்ட்டை சுளுக்கெடுத்துவிடுவார்கள்.

.

அந்த நாள் வரும் smile emoticon

Like · Comment · 
  • Chandrasekaran Krishnan சார். ஸீரோ ரேட்டிங் இன்னிக்குப் பார்க்க சாதுவா இருக்கலாம். இன்னும் கொஞ்சம் வர்ஷம் கழிச்சு அது நாட்டாமை ஆயிடும். ஏர்டல் என்னோட பைப்ப உபயோகிக்க நீ வரலாம் நீ வரக்கூடாதுன்னு சட்டம் போடுவான். அவனோட சேவைக்கு போட்டியா யார் யாரெல்லாம் இயங்க முடியுமோ அவங்க எல்ல...See More
    16 hrs · Like · 1
  • Chandrasekaran Krishnan அதோட, இன்னிக்கு ஏர்டெல் வாழ்கன்னு பச்சைக்கொடி காட்டும் ஃப்ளிப்கார்ட், நாளைக்கு ஏர்டெல் ரீடைல்க்கு வந்தால் என்னாகும்னு நினைச்சுப் பாருங்க. ஏர்டெலோட யார் யாரெல்லாம் பார்தட்னரா இருக்காங்களோ அவங்க சரக்கு மட்டும் எளிதா எல்லோருக்கும் போகும். காம்படீடர் எல்லோரும் ரிலையன்ஸ் கால்லயோ வோடாஃபோன் கால்லயோ விழனும். யார் கண்டா, பி எஸ் என் எல் மாதிரி யாரவது காக்கும் கரமாக ரிஸரக்ட் ஆகக்கூட இது வழி வகுக்கலாம்.
    16 hrs · Like · 1
  • Venkat Subramani Also - what guaranee is there, that, Airtle will not provide higher speed for a user using flipkart, than another user, brosing to other sites - net neutrality really will be questioned here...
    15 hrs · Like · 1
  • Srikanth Meenakshi பிரகாஷ், நல்ல சாராம்சக் கட்டுரை. குறிப்பாக நான்கு நிலைகளையும் சமமாக (balanced) எழுதியதற்குப் பாராட்டுகள். இந்த விஷயத்தில் ஃப்ளிப்கார்ட் செய்த தவறு கொஞ்சம் முந்திரிக்கொட்டைத் தனமாக முன்னால் சென்று பங்கேற்றது. இதில் first-mover advantage எல்லாம் ஒன்றும் ...See More
    8 hrs · Like · 1
  • Jaya Prakash Srikanth Meenakshi : உண்மை. FlipKart க்கு இது வேண்டாத வேலை. இந்த மாதிரி சர்ச்சைக்குள் எல்லாம் மாட்டிக் கொள்ளவே கூடாது. 

    மார்க்கெட்டிங் கோணத்தில் கூட, இது பெரிய புரட்சி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு வர்த்தகப் பரிமாற்றத்தில், வாடிக்கையாளருக்கு ஒரு 
    ...See More
    6 hrs · Like · 1
  • Srikanth Meenakshi Prakash, I look at it a bit differently. Today, among smart phone users, there are various kinds. Principle among them are people who use data without any care about charges, people who don't use data at all (don't have data plan even), and people who ...See More
    5 hrs · Like
  • Jaya Prakash But Srikanth Meenakshi, FK is not a content driven site ....like a youtube channel or khan academy. Flipkart's bottom line is selling. For all its technology hype and hoopla, its JUST a shop and you go there to buy something

    Apps in Education, Informa
    ...See More
    4 hrs · Like
  • Srikanth Meenakshi Prakash, my thought is that exactly for the reason that it is a commerce site and not a content driven site, that FK should offer the access for free (and build it into the price of products it sells). It just makes business sense. Extending your analo...See More
    4 hrs · Like
  • Badri Seshadri Jaya Prakash: I disagree. I think it will benefit Flipkart enormously. Whether it is good for the Internet itself is the current debate, not whether it will be beneficial to Flipkart.

    Aircel offers Facebook & Whatsapp on a cost free model. No one made
    ...See More
    4 hrs · Like · 1
  • Srikanth Meenakshi //They have very little money available for fancy data packs. Airtel Zero neatly fits in there. //

    Bingo.
    4 hrs · Like
  • Srikanth Lakshmanan Badri Seshadri Cost free model and Airtel Zero are not one and same. Aircel uses FB / Whatsapp as sampling to make people that data is worth. AZ on other hand is launching business platform. Sachin bansal himself says that B2B pricing in long term is n...See More
    4 hrs · Edited · Like
  • Badri Seshadri Srikanth Lakshmanan: I am aware that mobile data pricing is a rip off. I use mobile data very selectively (Vodafone - flat 1 GB plan @ Rs. 250/- a month. Speed drops to 64kbps after I exhaust the full data transfer. But I rarely hit even 50% of this li...See More
    4 hrs · Like
  • Srikanth Meenakshi //I think, things like AZ will fail on its own, soon enough. There is no critical mass for something like this to work even in the short term.//

    Badri, I don't see how you can say this at this time. The only situation that I see AZ failing is if the p
    ...See More
    3 hrs · Edited · Like
  • Badri Seshadri Srikanth Meenakshi: I am of the opinion that Flipkart will be successful, but very few others will be. So this will simply become a Flipkart+Airtel game and that will make it boring. Flipkart with deep pockets and actual direct benefit to their topline...See More
    3 hrs · Like
  • Srikanth Meenakshi Badri, I think you are underestimating the bandwagon effect. SnapDeal and Amazon will definitely join in if not immediately, at least once the TRAI ruling comes through. If one bank joins in others will. If one online investment services company joins in, others will. 
    2 hrs · Like
  • Badri Seshadri Srikanth Meenakshi: I doubt if any of the banks will join in. They do not get any benefit. (At least that is what I can see.) Ecom, it makes sense. Investment services... you are expecting too much:-) Anyone who is into serious investments will have access to decent Internet connectivity deal (or can get one) and will care the least about AZ.
    2 hrs · Like
  • Srikanth Meenakshi Badri, you're probably right...we'll see 
    1 hr · Like

Ess Ramakrishnan: Tamil a Writers and Authors by Uyirmmai Manushyaputhiran


எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 50 வயது
...........................................................

இன்று எஸ்.ராமகிருஷ்ணனின் 50 ஆவது பிறந்த தினம். இன்று அதிகாலையிலிருந்தே அவரைப் பற்றிய எண்ணங்கள் மனதை ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறன. நான் எஸ்.ராவின் பதிப்பாளன், நண்பன் என்பதைத் தாண்டி அவரது ஒரு வாசகனாக அவரைப் பற்றிய நினைக்கவும் சொல்லவும் எவ்வவோ இருக்கிறது.

ஏராளமான எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஆனால் யாரோ சிலர் தன்னளவில் ஒரு இயக்கமாக மாறுகிறார்கள். தமிழில் ஜெயகாந்தன் ஒரு இயக்கம். சுஜாதா ஒரு இயக்கம். எஸ்.ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரிய இயக்கம். கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக எழுதி எழுதி உருவான இயக்கம் அது. பொதுவாக தமிழில் எழுத்தாளர்களின் உச்சக்கட்டமான எழுத்து செயல்பாடுகள் என்பது ஏதாவது ஒரு பத்தாண்டுகள் இருக்கும். பிறகு அவர்கள் எழுதுவதை நிறுத்துவார்கள். அல்லது சக்கையாக மாறுவார்கள். ஆனால் வெகு அபூர்வமாக யாரோ ஒரு எழுத்தாளன் தன்னையும் தனது சொல்லையும் முன்னோக்கி செலுத்திக்கொண்டே இருக்கிறான். தன்னை தானே கடந்து சென்று தனது எழுத்தின் புதிய ரகசியங்களைத் திறந்துகொண்டே இருக்கிறான். எஸ்.ரா அப்படிபட்ட ஒரு அபூர்வமான கலைஞன்.

எஸ்.ரா தமிழ் வாழ்க்கையின் நிழல் படிந்த, இருள் படிந்த பக்கங்களை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அவருடைய மனிதர்கள் இந்த வாழ்க்கையின் சூதாட்டத்தில் தங்களைத் தாங்களே தொடர்ந்து இழப்பவர்கள். அவமானத்தையும் கசப்பையும் புறக்கணிப்பையும் வைராக்கியத்துடன் கடந்து செல்பவர்கள். மனித மனதின் விசித்திரமான வேட்கைகளும் கனவுகளுமே இந்த வாழ்க்கையின் ஆதாரமான நீரோட்டமாக இருக்கிறது என்பதை எஸ்.ரா பல அபூர்வமான கதாபாத்திரங்களின் மூலம் படைத்துக்காட்டினார். 
எஸ்.ரா அதீதமான புனைவுகளை உருவாக்க முயன்றதில்லை.அதற்காக அவர் மொழியை கதையின் வடிவத்தை திருக முயன்றதில்லை மாறாக வாழ்க்கைக்கு அதன் மிக எளித தளத்திலேயே ஒரு ஃபேண்டஸியும் அதீதத் தன்மையும் இருக்கிறது என்பதை அவர் கண்டைந்தார். அந்த அதீதத்தை அவர் வெகு அணுக்கமாக சென்று எழுதினார். எஸ்.ராவின் கதைகளின் ஆகப்பெரும் தனித்துவமாக நான் இதைக் கருதுகிறேன். 

எஸ்.ராவின் புனைவுகள் தமிழ் புனைகதைப் பரப்பின் எல்லைகளை பெருமளவுக்கு விரிவடையச் செய்தது என்றால் அவரது புனைவு மொழி கவிதைக்கும் உரைநடைக்கும் நடுவே ஆழமான சித்திரங்களையும் படிமங்களையும் உருவாக்குவதாக இருக்கிறது. நிலக்காட்சிகள், பருவ நிலைகளை பற்றிய எஸ்.ராவின் சித்திரங்கள் தமிழ் வாசகனின் நினைவுகளில் என்றும் அழியாத காட்சிகளை படைத்திருக்கின்றன. வெயிலை அவர் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிவிட்டார். 
புனைவுகளுக்கு வெளியே எஸ்.ராவின் இலக்கிய செயல்பாடுகள் நிகரற்றவை. அவர் உலக இலக்கியம், உலக சினிமா பற்றி எழுதிய ஏராளமான கட்டுரைகளாககட்டும், பல்வேறு கலை ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய பதிவுகளாகட்டும் ஒரு சமூகத்திற்கு சர்வதேச கலை மரபை கற்பிக்கும் பணியை அவர் இடையறாது செய்து வந்திருக்கிறார். அதே போல வரலாறு குறித்தும் பண்பாடு குறித்தும் அவர் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் உரையாடல்கள் ஒரு எழுத்தாளன் ஒரு சிந்தனை மரபை எவ்வளது தூரம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் அந்தவிதத்தில் ஒரு மகத்தான கல்வியாளர். 

தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக மேடைகளில் வசீகரமாக பேசக்கூடியவர்கள் அல்ல. அப்படி பேசக் கூடிய நிறைய எழுத்தாளர்கள் இங்கு இருந்திருந்தால் மேடைகளில் பட்டிமன்ற பேச்சாளர்கள் இவ்வளவு தூரம் ஆக்ரமித்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்களென்றுகூட அடிக்கடி நினைப்பேன். எஸ்.ரா அந்தவிதத்தில் ஒரு விதிவிலக்கு. அவர் நிகழ்த்திய உலக சினிமா பேருரைகளைக் கேட்க தினமும் ஆயிரம் பேர் வந்த காட்சியைக் கண்டிருக்கிறேன். பல மேடைகளில் பேச்சை ஒரு மேஜிக்காக மாற்றும் ஒரு அற்புதத்தை கண்டிருக்கிறேன். அது பார்வையாளனின் பலவீனங்களை சுரண்டும் மேஜிக் அல்ல. மாறாக வாழ்வின்மீதும் கலையின் மீதும் கொண்ட மிக அந்தரங்கமான பிணைப்பிலிருந்து உருவாகும் மேஜிக் அது.

எஸ்.ரா மிகப்பிரபலமான வெகுசன ஏடுகளில் தொடர்ந்து எழுதுகிறார். சினிமாவில் வேலை செய்கிறார் ஆனால் அவற்றையும் தீவிரமான இலக்கிய இயக்கம் சார்ந்த செயல்பாடுகளையும் அவர் குழப்பிக்கொண்டதே இல்லை. ஒரு சிற்றிதழ் மரபின், இலக்கிய மரபின் வலிமை என்னவென்று அவருக்கு தெரியும். வெசன ஊடகங்கள் தரும் புகழ் வெளிச்சம் தொடர்பான எந்த பிரமையையும் அவரிடம் நான் ஒருபோதும் கண்டதில்லை. அந்த வெளிச்சத்தின் பாசாங்குகளைப் பற்றி அவருக்கு எப்போதும் ஒரு கேலியான புன்னகை உண்டு.

உயிர்மை துவங்கபட்ட காலத்திலிர்ந்து அதன் எல்லா செயல்பாடுகளிலும் எஸ்.ரா இருக்க்கிறார். உயிர்மையுடனான அவரது இந்த பிணைப்பு என்னையும் தாண்டிய ஒன்று. உயிர்மையின் அடையாளம் எப்போது எஸ்.ராவின் அடையாளத்தோடு பிரிக்க முடியாமல் இருந்திருக்கிறது. இத்தனைக்கு நான் அவருக்கு விருதுகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய சர்வதேச பயணங்களை ஏற்பாடு செய்துதரக்கூடிய ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடிய பதிப்பாளன் அல்ல. 

இப்போதெல்லாம் ஒரு இளம் எழுத்தாளருடன் ஒருவருடம் உறவை தக்கவைத்துகொள்வது பெரும் போராட்டமாக இருக்கிறது. எஸ்.ரவுடன் இவ்வளவு காலம் தொடர்ந்து வேலை செய்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மனம் மிகவும் நெகிழ்கிறது. அது பரஸ்பரம் காட்டும் அன்பும் நம்பிக்கையும் மதிப்பும் மட்டுமல்ல, அது மதிப்பீடுகள் சார்ந்த ஒரு பிணைப்பு.

எஸ்.ராவின் இந்த 50ஆவது பிறந்த நாளை ஒரு இலக்கிய விழாவாக எடுக்கவேண்டும் என்று விரும்பினேன். அவரைப் பற்றிய ஒரு சிறப்பு மலரைக் கொண்டுவரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். எஸ்.ரா கூச்சத்துடன் அதை மறுத்துவிட்டார். அவருடைய அனுமதி கேட்காமலேயே நான் அதை செய்திருக்கவேண்டுமோ என்று இந்த நாளில் எனக்குத் தோன்றுகிறது.

கடந்த கால் நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கியத்தின் முகத்தை உருவாகியதில் எஸ்.ராவின் பங்கு பிரதானமானது. இன்னும் ஒரு கால் நூற்றாண்டேனும் அவர் அதை இன்னும் புதிய உயரங்களில் செய்வார் என்பதில் எந்த சந்தேகமில்லை. அவரோடு இருப்போம். அவரை பாதுகாப்போம்.

வாழ்த்துக்கள்.

A user's photo.

Friday, April 10, 2015

Writer Jeyaganthan: Virutcham, Meetings, Speeches


எனக்குத் தெரிந்த ஜெயகாந்தன்........

அழகியசிங்கர் 

இன்றைய செய்தித்தாளில் (09.04.2015) பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது 80வது வயதில் மரணமடைந்ததை வெளியிட்டிருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயகாந்தன் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். பல தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர் முன் மாதிரியாகச் செயல்பட்டவர். தமிழ் எழுத்தாளர்கள் பலரும் வேஷ்டிக் கட்டிக்கொண்டுதான் ஆனந்தவிகடன் பத்திரிகை அலுவலகத்திற்குப் படை எடுப்பார்களாம். அப்போது பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு மிடுக்காக வருபவர் ஜெயகாந்தன் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறேன். 

1970 ஆண்டு வாக்கில் கிருத்துவக் கல்லூரியில் நான் படித்தக் காலத்தில் ஒருமுறை பேச ஜெயகாந்தான் வந்திருந்தார். அன்று மாணவர்களைப் பார்த்து கோபமாக கூட்டத்தில் பேசினார். மாணவர்களும் அவரை எதிர்த்துப் பேசினார்கள். சமாதானம் செய்யவே முடியாது போலிருந்தது. ரொம்பவும் துணிச்சல்காரர். அந்தச் சமயத்தில் அவர் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. ஒருமுறை பரங்கிமலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் பேச வந்திருந்தார். அவர் பேசுவதைக் கேட்க நானும் சென்றிருந்தேன். அன்று அவர் வைத்திருந்த துண்டை தலையில் முண்டாசு மாதிரி (பாரதியார் ஸ்டைலில்) கட்டி இருந்தார். பின் கூட்டம் ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகிகளையே தாக்கிப் பேச ஆரம்பித்தார். அதைக் கேட்க வந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த மாதிரி காலக் கட்டத்தில் அப்படிப் பேசுவது அவர் இயல்பு என்று எனக்குப் பின்னால் பட்டது.

அவர் பேச்சைக் கேட்ட எனக்கும், அவர் மாதிரி பேச வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அதே மாதிரி நானும் மாம்பலத்தில் நாங்கள் ஏற்பாடு செய்த இலக்கியக் கூட்டத்தில் நானும் சத்தமாகக் கத்திப் பேசி கேட்க வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினேன். உண்மையில் என் இயல்புக்கு அதுமாதிரி பேசுவது ஒத்து வராததால், அப்படிப் பேசுவதையே விட்டுவிட்டேன். அதேபோல் ஜெயகாந்தன் பேசுவதையும் கேட்கப் போவதை நிறுத்திக் கொண்டேன். 

நான் ஜெயகாந்தன் புத்தகங்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன். இன்னும் கூட எனக்கு ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் என்ற நாவல் படித்த ஞாபகம் இருக்கிறது. பெண் பாத்திரமே வராமல் நாவல் எழுதியிருப்பார். அவர் சிறுகதைகளில் கதாபாத்திரங்கள் அறிவி ஜீவிகளைப் போல் சத்தமாக உரையாடிக் கொண்டிருப்பார்கள். பின்னாளில் அவர் பேசும் தன்மை மாறிவிட்டது. அவர் எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அந்தப் பேச்சில் ஒரு நியாயம் இருப்பதுபோல் படும்.  
ஏகப்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எழுதிக் குவித்த ஜெயகாந்தன் எழுதுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டார். ஆனால் எழுத்தாளர்களில் அவருக்குக் கிடைத்த மரியாதை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. எழுதியே சம்பாதித்தவர் அவர் ஒருவர்தான். ஞானப்பீட பரிசிலிருந்து எல்லாப் பரிசுகளும் அவரைத் தேடி வந்தன.
எனக்குத் தெரிந்து அவர் எழுத்து கூட பல எழுத்தாளர்களைப் பாதித்திருக்கிறது. அவர் கதைகளை சினிமாப் படங்களாகவும் எடுத்திருந்தார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அதேபோல் நானும் என் சகோதரரும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தைப் பார்த்துவிட்டு பாதியிலே எழுந்து வந்திருக்கிறேன். நடிகை லட்சுமி அப்படத்தில் புகையிலையைத் துப்பி துப்பியே நம் மீதும் துப்பி விடுவார்களோ என்ற பயம் வந்துவிடும். 

1999ஆம் ஆண்டு விருட்சம் சார்பாக முப்பெரும் கூட்டம் ஒன்றை நடத்தினேன். ஆதிமூலம், ஞானக்கூத்தன், சா கந்தசாமி மூவருக்கும். நடிகர் கமல்ஹாசன் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகத்தை வெளியிட்டார். அவர் முதல் முதலாக கலந்துகொண்ட இலக்கியக் கூட்டம் அதுதான் என்று நினைக்கிறேன்.
அக் கூட்டத்திற்கு எதிர்பாராமல் எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார். எனக்கு இது ரொம்ப ஆச்சரியமான விஷயம். ஜெயகாந்தனுடன் சேர்ந்து கூட்டமாக ஒரு புகைப்படம எடுத்துக்கொண்டோம்.

கடைசியாக அவருடைய சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழா மியூசிக் அகாடெமியில் ஆனந்தவிகடன் நடத்தியது. அதில் கலந்து கொண்டேன். ஏகப்பட்ட கூட்டம். 

ஜெயகாந்தனால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. 
அவர் மறைவைக் குறித்து விருட்சம் தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறது.

A user's photo.
Like · Comment · 
  • Raja Subbu May his soul rest in peace.
  • Kmb Thiruna "சிறுகதை மன்னன்" ஜெயகாந்தன் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் படைப்பாற்றல் மிக்க ஓர் அற்புத எழுத்தாளரைத் தமிழ்கூறும் நல்லுலகம் இழந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர் எழுதிய எண்ணற்ற சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றைப் படித்து, தாக்கத்திற்கு ...See More
    19 hrs · Like · 1
  • Ramanathan Rk Kmb Thiruna.. இங்கே சந்திக்கிறோமே...!!உலகம் கைக்குள் அடக்கம். 
    ஜே கேயின் எழுத்து..காலம்தாண்டி
    ஜீவிக்கும்..!
    18 hrs · Like · 1
  • Kmb Thiruna Hi.. R.K. How are you? முகநூல் அழைப்பு விடுத்துள்ளேன். ஏற்றுக்கொண்டு கருத்துக்கள் பகிரவும். பணியில் தற்போது எந்தக் கிளையில் இருக்கிறீர்கள்? வாழ்த்துக்கள்.
    - கு.மா.பா.திருநாவுக்கரசு
    7 hrs · Like

Chennai Literary Meetups: Haruki Murukami: Books and Readers


தமிழில் ஹாருகி முரகாமியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. “யானை காணாமலாகிறது” என்ற தொகுப்பை மலைகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். ”நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது” என்ற தொகுப்பை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். இது அவுட் ஆப் பிரிண்ட் என்று நினைக்கின்றேன். தொகுப்பை பற்றிய சிறுகுறிப்பை இந்த சுட்டியில் பார்க்கலாம். இந்த இரண்டு தொகுப்புகளிலும் உள்ள சிறுகதைகளையும், முரகாமியின் படைப்புலகம் பற்றியும் செவ்வி மூன்றாவது கலந்துரையாடலில் விவாதிக்க இருக்கிறோம் ஸோரன்டினோவின் “ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை” பற்றி நண்பர் விஜயமகேந்திரன் பேசுவார். ஹாருகி முரகாமி பற்றி நான் பேசுகிறேன். வரும் ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸில் சந்திக்கலாம்...

http://nvmonline.blogspot.in/2010/08/blog-post.html

Books: Namakkal Kavinjar: Ve. Ramalingam Pillai story


இன்று நான் வாசித்து முடித்த புத்தகம் நாமக்கல் கவிஞரின் சுயசரிதையான என் கதை.எளிமையான விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார்.நாமக்கல் கவிஞர் நல்ல சித்திரக்காரர்,கருப்பு -வெள்ளை புகப்படக்கலைஞர்,பயணங்களில் பிரியமுள்ளவர்,நாடகத்தின்பால் ஈர்ப்புக்கொண்டவர் ,சுதந்திரவேட்கையில் சிறை சென்றவர் என அவருடைய ஆளுமை பன்முகத்தன்மைகொண்டு பரந்துவிரிந்தது.கிட்டப்பா போன்ற நாடககலைஞர்களுக்கு பாடல் எழுதிக்கொடுத்தவர் அந்த பாடல்களை சேகரிக்காமலே விட்டுவிட்டவர்.மாணிக்க நாயக்கர் என்கிற நண்பருடன் வடநாடு யாத்திரை செல்லும் அத்தியாயம் அற்புதமான பதிவு.பழனியப்பா பிரதர்ஸ் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் என் கதை -யை 1968ல் முதற்பதிப்பாய் வெளியிட்டுள்ளது.ஏழாம் பதிப்பு 2010ல் .வாசித்துப்பாருங்கள்.

Like · Comment · 

Tuesday, April 7, 2015

Midlife Crisis: Disappointed with Life: Questions from PuraNaanooru


நவீன வாழ்க்கையில் மனிதன் முழுவதுமாக அன்னியப் பட்டுப் போய் விட்டான். அதன் கசப்புணர்வும் விரக்தியும் தான் நவீனத்துவ இலக்கியம் முழுக்க வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொதுவாக எல்லா இலக்கிய விமர்சகர்களும் கூறுகிறார்கள். இந்தப் புறநானூற்றுப் பாடலை வாசிக்கும் போது, எல்லாக் காலகட்டங்களிலும், சில மனிதர்களுக்காவது நேர்வது தான் அது என்று தோன்றுகிறது. அனேகமாக அவர்கள் தான் (நல்ல) கவிதைகளையும் எழுதுகிறார்கள். 

அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. 

(பாடியவர்: ஓரேர் உழவனார்) 

உரித்த தோலைப் பரப்பியது போன்ற 
நீண்ட வெளிறிய சேற்று நிலத்தில் 
ஒருவன் துரத்தி வரும் மானைப் போல 
ஓடிப் பிழைக்கவும் கூடுமோ 
சுற்றி நிற்கும் வாழ்க்கை தடுக்கும் போது. 

இந்தப் பாடலுக்கு உரை கண்ட உ.வே.சா உள்ளிட்ட தமிழறிஞர்கள் அத்தனை பேரும், 'ஒக்கல் வாழ்க்கை' என்பதற்கு சுற்றத்தாருடனே கூடி வாழும் இனிய இல்வாழ்க்கை என்று பொருள் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாழ்க்கை இல்லாதவர்களுக்கே துறவும் தவ ஒழுக்கும் தகும்; அதனையுடையவர்கள் துறவு நெறியில் ஓடிச் சென்று உய்தல் கூடாது என்பதே புலவர் கூறும் கருத்து என்கிறார்கள். 

ஒரு எளிய வாசகன் கூடத் தீண்ட முடிந்த கவிதையின் உள்ளத்தை பண்டித மனங்கள் பல நேரம் தவற விட்டு விடுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். 

ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் 'புல்வாய்' அது. நூற்றாண்டுகள் கழித்தும் இந்தக் கவிதை வழியாக வந்து நம்மைத் தாக்குகிறது அந்த சங்கப் புலவனின் தனிமை.


Jeyamohan's Vennmurasu: Sashi Tharoor Mahabharatas: Where is Gandhi?


வெண்முரசின் தருமன் ஒரு "காந்திய" வார்ப்பு என்று விளக்கி சில நாட்கள் முன்பு வாசகமணி ஒருவர் காத்(ந்)திரமான பதிவொன்று எழுதியிருந்தார். 

"நாம் பீஷ்மரை காந்தியைக்கொண்டே புரிந்துகொள்ள முடியும். காந்தியைப் போல பீஷ்மரும் கடைசி வரை உலகியல் களத்தில் தான் இருந்தார்" - இப்போது ஜெயமோகன். இது புதுசல்ல. ஷஷி தரூரின் The Great Indian novel என்ற மகாபாரத நாவலில் Gangaji என்ற பாத்திரத்தில் இதையே செய்திருக்கிறார். அந்த பிடிவாதமிக்க கோமாளித் தனமான காந்தி பாத்திரம் பீஷ்மரின் சாயலில் படைக்கப் பட்டது.

இந்த பாரதத்தில் தான் எத்தனை காந்திகள்!

பி.கு: தரூரின் நாவலில் பாண்டு போஸ், திரிதராஷ்டிர ஜவஹர், முகமது அலி கர்ணா, இந்திரா பிரிய துர்யோதனி ஆகியோரும் உண்டு smile emoticon smile emoticon


Monday, April 6, 2015

How to pretend to be happy on the Internet

http://kernelmag.dailydot.com/issue-sections/headline-story/12337/how-to-be-happy-online/

Thursday, April 2, 2015

Thaayumanavar Songs: Divine Experiences in Tamill literature


தாயுமானவரின் பாடல்களை தத்துவத் தமிழ் அமுதம் என்றழைக்கலாம். மெய்யுணர்வு உபதேசங்கள் மட்டுமல்ல, அவற்றின் எளிமையும், ஆழமும், சொல்லழகும், அர்த்த கம்பீரமும் கூட அபாரமானவை. ஆன்மீகத்திலும் தத்துவத்திலும் பெரிய ஈர்ப்பு இல்லாமல் "படிப்பவர்களை"க் கூட அவை கொள்ளை கொள்ளும். 

இன்று காலை வாசித்து, தியானித்த ஓர் அற்புதமான பாடல்: 

காரிட்ட ஆணவக் கருவறையில், அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப்போல்
கட்டுண் டிருந்த எமை வெளியில்விட்டு, அல்லலாம்
காப்பிட்டு, அதற்கிசைந்த
பேரிட்டு, மெய்யென்று பேசு பாழ்ம் பொய்யுடல்
பெலக்க விளை அமுதம் ஊட்டி,
பெரிய புவனத்தினிடை போக்கு வரவுறுகின்ற
பெரிய விளை யாட்டு அமைத்திட்டு,
ஏரிட்ட தன் சுருதி மொழி தப்பில், நமனைவிட்டு
இடர் உற உறுக்கி, இடர் தீர்த்து,
"இரவுபகல் இல்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்து துயில் கொண்மின்" என்று,
சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே,
சித்தாந்த முத்திமுதலே,
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயானந்த குருவே. 

(கார் - கருமை, குழவி - குழந்தை, அல்லல் - துன்பம், பாழ்ம் பொய்யுடல் - பாழாகப் போகும் பொய்யான உடல், பெலக்க - வளர்ச்சியடைய, விளை அமுதம் - ததும்புகின்ற தாய்ப்பால், ஏரிட்ட - பெருமைபொருந்திய, சுருதிமொழி - வேத நெறிக்கு, தப்பில் - தவறாக நடந்தால், நமன் - யமன், உறுக்கி - வருத்தி). 

கருவறையின் கருமையில் தன்னுணர்வு (ஆணவம்) உருவெடுத்து, 'மெய்' என்ற பொய்யுடல் கொண்டு (மாயை), உடுத்து உண்டு வளர்ந்து விளையாடி, மாண்டு (கன்மம்), விடுபட்டுச் சென்றடையும் அம்மையப்பனாகிய இறை நிலையை, மௌன குருவாக, தட்சிணாமூர்த்தியாக வணங்கிப் பாடுகிறார்.